மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

தந்தி டிவி கருத்துக்கணிப்பு - பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு

ரஜினி மற்றும் கமல் ஆகியோரில் யார் சிறப்பாக செயல்படமுடியும் என்ற  தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு எதேச்சையானது அல்ல. 

கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் நடைபெற்ற சில சம்பவங்களின் தொடர்ச்சிதான். பாண்டே என்பவர் பாஜகவின் வெளிப்படையான ஆதரவாளர் என்பது மக்கள் அறிந்தது என்றாலும் விமரிசனங்களைக் குறித்து கவலைப்படாமல் கொடுத்த வேலையை சரியாகச்செய்பவர்.

அதன் பின்னணியிலேயே  தந்தி டிவியின் கருத்துக்கணிப்பை அணுக வேண்டியுள்ளது.
படம் நன்றி: தந்தி டிவி 
ரஜினியை ஒரு முகமாகவும் கமலை மற்றோரு முகமாகவும் வைத்து தமிழகத்தில் காலூன்ற நினைத்த பாஜகவுக்கு அவர்களால் பெரிய அளவில் தாக்கத்தையோ மக்கள் செல்வாக்கையோ பெறமுடியாதது மட்டுமல்லாமல் எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்த முடிந்ததினால் மாற்று திட்டத்தில் இப்போது களமிறங்கியிருக்கிறது பாஜக.

அமித்ஷா வருகையும் கடந்தவாரங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனைகளும் கைப்பற்றிய  பணமும் தங்கமும் ஆவணங்களும் எடப்பாடி மீதான நேரடி தாக்குதலே. இது நிச்சயமாக பாராளுமன்றத்தில் பாஜகவை ஆதரிக்க செய்வதற்காக அல்ல. அவர்கள் கேட்காமலேயே ஆதரவு கொடுக்கும் நிலையில் தான் அதிமுக உள்ளது. 

ஆனால் எடப்பாடியை தன்னுடைய பிளான் பி திட்டத்திற்கு வழிக்கு கொண்டு வரும் முயற்சி. அதன் தொடர்ச்சிதான் இந்த கருத்துக்கணிப்பு. தனிக்கட்சி கனவில் இருக்கும் ரஜினியின் செல்வாக்கை அவருக்கும் உணர்த்தியாகிவிட்டது. 

எடுப்பார் கைப்பிள்ளையான பன்னீர்செல்வத்தின் மீது சொத்துக்குவிப்பு வழக்கை திமுக தொடுத்த நேரத்தை ஆதாயமாகக்கொண்டு அவரையும் வளைத்தாகிவிட்டது. தமிழகம் வந்திருந்த அமித்ஷா ஜூடிசியல் கிருஷ்ணமூர்த்தி என்ற புரோக்கரை சந்தித்து விட்டு சென்றது முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதும் சாமரம் வீசும் சென்னை உயர்நீதிமன்றம் பன்னீர்செல்வம் வழக்கில் கடுமை காட்டுவதின் பின்னணி அதுவே.

இனிமேல் புதிய புரட்சித்தலைவராக அதிமுகவை தலைமையேற்று வழிநடத்த ரஜினி அவதாரம் எடுப்பதை எதிர்பார்க்கலாம். அதற்கு முன்னோட்டம் தான் இந்த கருத்துக்கணிப்பு என்பது எமது அவதானிப்பு.

நீட் எனும் மோசடி


ஆச்சரியம் என்னவென்றால், தலைக்கு 15 லட்சம் டெபாசிட் தொடங்கி, சர்ஜிக்கல் ஸ்டிரைக், பர்மாவில் நூறு தீவிரவாதிகள் சுட்டதாக பீலா, கறுப்பு பணம் மீட்பு, தேர்தல் கமிஷன், நீதித்துறை, பணமதிப்பிழப்பில் ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்ற பணத்தை எண்ணிக்கொண்டே இருப்பது,  பின்வாசல் வழி ஆட்சி, கவர்னர் ஆட்சி, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் குறித்த நீதிமன்ற வேஷங்கள் என்று விடிந்தது முதல் அடையும் வரை ஓயாமல் அண்டப்புளுகு புளுகிக்கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வில் மட்டும் நியாயமாகவா நடந்து கொள்ளும்?

நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் எல்லாரும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருப்பதால் தான் வேண்டாம் என்கிறார்கள். இன்னும் சிலர் மாநில பாடத்திட்டத்தில் இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் எந்த பாடத்திட்டத்தில் இருந்தாலும் நீட் தேர்வு என்பதே மோசடி செய்யத்தான்  கொண்டு வருகிறார்கள் என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

இந்த வருட தேர்வு முடிவுகளில்  உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்கள் தமிழகத்தை விட மிக அதிக தேர்ச்சி விகிதத்தை கங்கையில் மிதக்கும் சடலம் கூட நம்பாது.

குறைந்த முதலீடு, குறுகிய காலத்தில் அதிக லாபம் என்று சொல்லி பைனான்ஸ் கம்பெனிகள் பணத்தை உருவிக்கொண்டு ஓடியதைப்போல தரமான மருத்துவர்கள் என்று சொல்லி தலையில் நீட் எனும் மிளகாயை அரைத்து விட்டார்கள்.

உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பைக்கொண்ட தமிழகத்தில் நீட் எனும் பெயரால் வடமாநிலத்தவர் பயன்படுத்திக்கொள்ளவே இந்த நீட்  தேர்வு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. 

நீ அரிசி கொண்டு வா 
நான் உமி கொண்டு வாரேன்  
ரெண்டையும் கலந்து ஊதி ஊதி தின்போம் 

என்பது போல் நீட் தேர்வு நம் மக்களின் உரிமையை அனுபவிக்க அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தாகிவிட்டது..இனிமேல் பறிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

மநு தர்மமே குறிக்கோள் - ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம்


இந்திய விமானப்படையில் பணிசெய்து கொண்டிருக்கும்போது,  ஆர் எஸ் எஸ் (Rashtriya Swayamsevak Sangh) பிரச்சாரம் செய்த கொள்கைகளைப்பார்த்து தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பணியை  விட்டு விட்டு ஆர் எஸ் எஸ் ஸில் முழுநேர பணியாளராக சேர்ந்து பதினைந்து வருடங்களாக வேலை செய்கிற ஒரு  ஆர் எஸ் எஸ் காரர் வாக்குமூலத்தை  மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த நம் நண்பர் வாட்ஸாப்பியிருந்தார். 

மிகச்சரியான வார்த்தைப்பிரயோகம் இல்லாவிட்டாலும் அவர் சொல்ல வந்த கருத்தை என்  நடையில் மொழிபெயர்த்துள்ளேன். 

நிருபர்: என்னோடு கூட ஆர் எஸ் எஸ் ஸில் கிட்டத்தட்ட 15 வருடமாக பணிசெய்யும்  நபர் இருக்கிறார்.  ஆர் எஸ் எஸ் பற்றி இவரிடம் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பெயர் என்ன?

நான்..விஜய் காஷ்யப் , பீகாரிலிருந்து வருகிறேன். இந்திய விமானப்படையில் ஏவுகணை செலுத்தும் பொறியாளராகப் பணியாற்றினேன். தேசத்திற்காக  சமூக சேவையே சிறந்தது என்று அந்த பணியை விட்டு விட்டேன். அதன் பின்பு ஆர் எஸ் எஸ் என்பது தேச நன்மைக்காக இருக்கிற தன்னார்வ நிறுவனம் என்று கருதி அதில் சேர்ந்து பதினைந்து வருடம் சேவை செய்து கடைசியில் இந்திய அளவில் தொழில் துறை தலைவர் என்ற நிலையில் இருந்தேன்.  ஆனால் எந்த நோக்கத்திற்காக விமானப்படை பணியைத் துறந்தேனோ அந்த வழியில் ஆர் எஸ் எஸ் செல்லவில்லை என்பதை புரிந்துகொண்டேன். 

(நிருபர் குறுக்கிட்டு): ஆர் எஸ் எஸ் எந்த வழியில் செல்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

தேசத்தின் 90 சதவீத மக்களுக்கான நன்மைக்கான எந்த நோக்கமும் ஆர் எஸ் எஸ் ஸிடம்  கிடையாது. அதனால் அங்கேயிருந்து ஏமாற்றமடைந்து...

(நிருபர் குறுக்கிட்டு): அப்படியானால் யாருடைய நன்மைக்கான திட்டம் வைத்திருக்கிறார்கள்?

தங்களுடைய நன்மைக்கான திட்டம் மட்டுமே..எப்படி டாட்டா ஒரு பொருளை தன்னுடைய லாபத்திற்காக உற்பத்தி செய்கிறதோ  அப்படி..

அப்படியானால் எந்த மக்களுக்கான நன்மைக்கானது அவர்களின் நோக்கம்?

ஆர் எஸ் எஸ் ஸின் வரலாற்றை  பார்த்தோமானால் தங்களை நிலை நிறுத்தவும் தங்களுடைய யோசனையை நிலைநிறுத்தவும் நூற்றாண்டுகளாக  பாரதத்தில் 4500 - 5000 வருடங்களாக  எந்த மனப்பான்மை  அடிமைத்தனத்தை ஏற்படுத்தி வைத்திருத்திருக்கிறதோ ...

(நிருபர் குறுக்கிட்டு): எந்த மனப்பான்மை என்று தெளிவாக சொல்லுங்களேன்.. 

பாருங்கள்.. ஆர் எஸ் எஸ் என்பது உலகத்தின் பல இடங்களில் நிறைந்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எனக்கு பதினைந்து வருடமாகியது. நான் ஏன் வெளியேறினேன் என்பதை நீங்கள் நுட்பமாக அறிந்து கொள்ளவேண்டும். எந்த தேசத்தின்  சமூக சேவை செய்வதற்காக நான் விமானப்படை பணியையே  விட்டுவந்தோனோ அந்த தேசத்தின் சேவை செய்வதற்கான எந்த திட்டமும் இங்கேயில்லை.

ஆர் எஸ் எஸ் ஸில்  எந்த திட்டம் உங்களுக்கு பிடிக்கவில்லை?

பாரதிய ஜனதா கட்சி வளர்ந்திருக்கிறது. தேசத்தின் சேவைக்காக ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரையும்  கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் நிறைய நல்லவர்கள் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தேசத்தின் சாமானியனாகிய தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களைக்குறித்து  அக்கறை கொள்வதற்கு  எந்த திட்டமும் இல்லை.

அப்படியானால் யாரைக்குறித்து அக்கறை கொள்கிறார்கள்? பதினைந்து வருடங்கள் இருந்ததால் தெரியுமல்லவா?

இந்து மதம் , இந்து ராஷ்டிரத்தைக்குறித்து பேசுகிறார்கள். இந்து மதம் என்பது இவ்வளவு சிறந்ததாக இருக்குமென்று சொல்வேனேன்றால் , லட்சக்கணக்கான இந்துக்களாகிய ஏழைகள் சாமானியர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள்  குறித்து சிந்திக்க வேண்டும்.

நீங்கள் ஆர் எஸ் எஸ் ஸில் சேரும்போது அவர்களுடைய வேலை என்ன என்று உங்களுக்கு தெரியாதா?

தேசத்திற்காக தன்னார்வ  சேவை (RSS) என்று அவர்கள் எழுதியிருக்கிறார்கள், ஆனால் தேசத்தின் சேவை என்ற பெயரில் நடக்கிறது  எதுவோ..

(நிருபர் குறுக்கிட்டு): எது நடக்கிறது என்று மக்களுக்கு சொல்லுங்கள்..

மநு ஸ்மிரிதி யை திரும்பவும் இந்தியாவில் நிலைநிறுத்தவும்,  பிராமணர்களை மீண்டும் ஆதிக்கத்தில் கொண்டு வரவும்,  ஒற்றை வரியில் சொல்லவேண்டுமென்றால் இரண்டரை சதவீதமாகிய அவர்கள் மீதி தொண்ணூற்றி ஏழரை சதவீத மக்களை எப்படி  ஆளுகை செய்வது என்பதே ஆர் எஸ் எஸ் ஸின் திட்டம்.

அவர்களுடைய கூட்டங்கள் நடக்கும்போது இதுகுறித்து விவாதிப்பார்களா?என்ன விவாதிப்பார்கள்?

ஆர் எஸ் எஸ் ஸிடம் உள்ள மறைக்கப்பட்ட எதோ திட்டம் உள்ளதுபோல ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆனால் செய்கிற காரியங்களிலிருந்து அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த தேசத்தின் லட்சக்கணக்கான மக்கள் உயிரையும் கொடுத்திருக்கிறார்கள். நான் விமானப்படையின் பணியை விட்டுவிட்டு சேவைக்காக வந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் நோக்கமெல்லாம் இந்து ராஷ்டிரம்.. இந்துராஷ்டிரம்.. என்பதுதான்.  இந்தியா.. இந்தியா என்று சொல்லி இந்தியாவின் நன்மையை  குறித்து சிந்திப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. 

அப்படியென்றால் என்ன கொள்கை அவர்களுக்கு?

அவர்கள் அவர்களுக்காகவே கடையை திறந்திருக்கிறார்கள்...மநு ஸ்மிருதியை வியாபாரம் செய்கிறார்கள். மநுஸ்மிருதி சொல்கிறது பிற்படுத்தப்பட்டவனும் தாழ்த்தப்பட்டவனும் ஒடுக்கப்பட்டவனும் நம் காலின் செருப்பு போன்றவர்கள். அவர்கள் செருப்பாகவே இருக்கவேண்டும்.

என்ன சொல்கிறார்கள் என்று சொல்லுங்கள்..நீங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்..பின் எப்படி பதினைந்து வருடம் இருந்து  இந்திய அளவில் துறை  தலைவராக உயர்ந்தீர்கள்?

நான் தேசத்தின் சேவைக்காக சென்றேன். 

அப்படியானால் நன்றாக சேவை செய்ய வேண்டியதுதானே?

ஆர் எஸ் எஸ் ஸில் உள்ள நல்ல விஷயம் என்பது ஒருவனை நல்ல தலைவனாக உருவாக்குவார்கள். ஆனால் தேசத்திற்காக அல்ல..தங்களுடைய அமைப்பிற்காக மட்டுமே. தேசத்தின் சேவை செய்ய விடவும் மாட்டார்கள்.  நான் தேசத்திற்காக மரிக்கவும் தயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட படிப்பினையை அவர்கள் கற்றுத்தருவார்கள். ஆனால் சாமானியனுக்காக உழைப்பதற்காக அல்ல தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மட்டுமே.

இஸ்லாமியர்களைக்குறித்து என்ன விவாதிப்பார்கள்?

இந்தியாவில் இருப்பவன் எல்லாருமே இந்துக்கள் தான். இஸ்லாமியர்களும் இந்துதான். அதெப்படியாகும்? அவர்கள் எப்படி இந்துக்கள்? இவர்கள் இந்து.. இந்து மதம்  என்று தேசம் முழுவதும் ஓங்கி ஒலிக்க செய்கிறார்கள். ஆனால் இந்து என்ற வார்த்தையே ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்றவற்றில் கிடையாது. 

உங்களைப்போன்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன விதமான மரியாதை?

அதைக்குறித்து யோசித்தால் அந்த அமைப்பிலேயே நான் இருக்க முடியாது. தகுதியில்லாத நபர்களெலாம் தலைவராக வருகிறார்கள்.

ஏன் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மோடியை பிரதமராக ஆக்கவில்லையா?

இல்லை..அவரை தலைவராக ஆக்குவதற்கென்றே பிற்படுத்தப்பட்டவரென்று மாற்றினார்கள்..ஆனால் அவர் பிற்படுத்தப்பட்டவர் இல்லை. சில வருடங்கள் முன்பு அவர் பிற்படுத்தப்பட்டவர் இல்லை.

உங்களுடைய கோரிக்கை என்ன?

என் விஷயமாக மோகன் பாகவத்திடம் சொல்லுங்கள். இந்த அமைப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடமே இல்லை.

தலித்துகள்?

அவர்களைக்குறித்த கேள்வியே கிடையாதே..

கடைசியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஆர் எஸ் எஸ் என்பது தேசத்திற்கான சேவை செய்வதல்ல..இது மநுஸ்மிருதி சேவை..பிராமணர்களுக்கான சேவை..இரண்டரை சதவீதமுள்ள அவர்கள் மீதி தொண்ணூற்றி ஏழரை சதவீதத்தினரை எப்படி ஆளுகை செய்யலாமென்ற சேவை மட்டுமே.

காணொளி இணைப்பு

ஏ... வேற ஏதாவது கேள்வி இருக்கா?

இருக்கு ..ஆனால் காலம்சென்ற நடிகை சௌந்தர்யா சம்பந்தமாக பொது  வெளியில் உம்மிடம் கேட்பது அவ்வளவு நியாயமாகவா இருக்கும்?
அதனால் உமது பேட்டியிலிருந்தே சில கேள்விகள் .. 

சமூக விரோதிகள் காவலர்களை அடித்தபின்புதான் கலவரம் உருவாகியதென்று நேரில் பார்த்தவரைப்போல் அறுதியிட்டு கூறுகிறீர் ..
சமூக விரோதிகள் காவலர்களை அடித்ததால் காவலர்களுக்கு கோபம் வந்து பொது மக்களை சுட்டுவிட்டார்கள் என்பதுதானே அர்த்தம்? 

சமூக விரோதிகள், காவலர்களை அடிப்பதற்கு பதில் நேரடியாகவே மக்களை அடித்திருக்கலாம் தானே..கலைஞர் கைது சம்பவத்திற்கு பின்பு நடந்த பேரணியில் ஜெயலலிதா அப்படித்தானே அயோத்திக்குப்பம் வீரமணியை வைத்து ஏற்பாடு செய்திருந்தார்?

சமூக விரோதிகள் காவலர்களை அடித்தால் அவர்களைத்தானே சுடவேண்டும்? செத்தது சமூக விரோதிகளா? 

ஆம் என்றால் சமூக விரோதிகள் செத்ததற்கு நீர் ஏன் 'சுட்டது காட்டுமிராண்டித்தனம்'  என்று போனவாரம் பினாத்தினீர்? 

ஐயா.. உச்ச நடிகரே சில வார்த்தைகள்  உங்களுக்கு ...எங்கள் ஐயன் வள்ளுவன் வாயிலாக..

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப் படும் 
நடுவுநிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும் 

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் 
மனம்போல வேறு படும் 
இனம்போலவே இருந்து உண்மையில் இனமல்லாதவரின் நட்பு பொது மகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும் 

இணையதளம் பக்கம் சற்று எட்டிப்பாரும் எம் தமிழக மக்கள் உமது பேச்சுக்கான  எதிர்வினையை 
"செய்து" இருக்கிறார்கள். அறிந்து கொள்வீர் நீர் எமக்கு யாரென்று...

நாங்கெல்லாம்...!

உச்சத்தில் எரிபொருள்  விலை 
இருளில் இந்தியா..! 
சமாதியில் சிறுதொழில்
தீவிர சிகிச்சைப் பிரிவில்
நீதித்துறை !
இத்தனைக்கும் காரணம்....?
வேறே யார்?
காங்கிரஸ்  தான்!!
- ரஷ்ய அதிபரிடம் இந்திய அதிபராக பரிணாமமடைந்தவர் கவலை. 
-------------------------------------------------------------------------------- 
விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் காங்கிரஸ்தான். ஆம் 100 கோடிக்கும் கூட எம் எல் ஏ க்களை வாங்கமுடியாததற்கு காரணம் காங்கிரஸ்தானே ! 
- அமித்ஷா ஆக்ரோஷம். 
---------------------------------------------------------------------------------
அவாளா இருக்கணும் 
இல்ல.. அவா ஆளா இருக்கணும்..! 
-குடிமைப்பணிக்கு புதிய தேர்வுமுறை அறிமுகப்படுத்தவுள்ளதாக மத்திய அரசு தகவல். 

---------------------------------------------------------------------------------
கர்நாடகத்தில் ஜனநாயத்தை நிலைநாட்டியது உச்சநீதிமன்றம்; செய்தி 
- ஆசையை தூண்டுனாத்தானே ஏமாற்றமுடியும்...முழுக்குடுமியையும் காட்டினா முக்கியமான நேரத்துல நாட்டாமை பண்ணுவதெப்படி?

---------------------------------------------------------------------------------
காரணமில்லாமல் மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை செய்யமாட்டார்கள்; ரஜினி  
-  எதற்குமே வாயைத்திறக்காத  நீர் இதற்குமட்டும் கருத்துச்  சொல்லக்  காரணம்? 

---------------------------------------------------------------------------------

இன்றைய செய்தியும் சில நினைவூட்டலும்...!!

பாஜக வினர், வெட்டவெளிச்சமாக மீடியா முன்பே தான் சொன்னதை சொல்லவே இல்லை என்று மிக எளிமையாக சூடு சொரணை மானம் வெட்கம் (அதெல்லாம் பாஜகவில் எதிர்பார்க்கக்கூடாது) எதுவுமில்லாமல் கடந்து செல்வார்கள்.

இருந்தாலும் சில நினைவூட்டல்கள்..

செய்தி 1: எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் இன்றிரவு  அல்லது நாளை அழைக்கிறார் 

நினைவூட்டல் 1:
அருண் ஜெட்லீ : தொங்கு சட்டசபை அமையுமானால்,  தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்கள் கூட்டணி அமைக்கும்போது, அவர்களை ஆட்சி அமைப்பதற்கும் குறிப்பிட்ட காலத்தில்  பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும்  உத்தரவிடுவதே அரசியலமைப்பு சட்டத்தின் படி சரியாகும். (அப்போ அது மணிப்பூர்லயும் மேகலாயாவிலும் நாகாலாந்திலும் இந்தக் கருத்து தேவையாயிருந்தது)

செய்தி 2: உத்திரப்பிரதேசத்தில் வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்து 15 பேர் மரணம், மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

நினைவூட்டல் 2: மேற்கு வங்காளத்தில் 31, மார்ச் 2016ல் தேர்தல் சமயத்தில் பாலம் இடிந்து விழுந்து 50க்கும் மேற்பட்டோர் மரணித்ததை பிரதமரும் வாரணாசி தொகுதி எம்.பியுமான மோடி சொன்னது:  "இது கடவுளின் செய்தி. இந்த ஆட்சி தொடருமானால் ஒட்டுமொத்த மேற்கு வங்காளமும் அழிந்துவிடும்"

ஏதாவது உரைக்கும்ங்கிறீங்க?

நெசம்மாவே நடந்திருச்சா எடியூரப்பா

நாசமாப்போக என்று மனசு நிறைஞ்சு (?) வாழ்த்துனதுல இப்போ நிலவரம் அப்படியே ஆயிடுச்சி போல குருநாதா?

பின்வாசல் வழியாவே இதுவரை வாழ்ந்த நம் கட்சிக்கு பின்னாலே குத்திட்டாங்களே குருநாதா...

அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே ...(பின்னணி இசை)


 ..மாட்டுக்குள்ளதையும் மனுஷனுக்குள்ளதையும்  சேர்த்து  வச்சி பூசிட்டாங்களே..!
மேகலாயாவுலயும் கோவாவுலயும் செஞ்சத பார்த்து இப்படி செஞ்சுப்புட்டாங்களே ...
பதவியேற்குமிடத்துக்கு குடுத்த அட்வான்ஸ எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு திருப்பி கேப்பேன்?

அந்த குமாரு பயபுள்ள நல்லா இருப்பானா..
நான் கொடுப்பேனடா எத்தனை கோடின்னாலும் ..நம்ம ரெட்டி காரு கொடுப்பாரேடா கொமாரு நீ நல்லா இருப்பியா?

காவிரி தண்ணிய தராம இருக்க வரைவு திட்டம் செஞ்சோமடா  பாவி இப்போ என் எங்க கண்ணுல தண்ணிய வர வச்சி பிளான் பி திட்டத்தை செஞ்சுப்புட்டாங்களே கொமாரு ...

ஆமா ஓட்டு மெஷின்ல அந்தக் குத்து குத்தியுமா நாங்க தோத்துட்டோம்? கள்ளத்தனம் செய்யாம இருந்திருந்தா இந்நேரம் நாறியில்ல போயிருக்கும்..

காவிரி எழவு திட்டம்

ஒரு பழைய ஜோக் ஒன்று கிராமங்களில் உலாவினது நியாபகத்திற்கு வருகிறது. பின் நாட்களில் அது  நகைச்சுவை காட்சி அமைப்பாக பூவே உனக்காக திரைப்படத்திலும் இடம்பெற்றது.

பிச்சைக்காரனுக்கு பிச்சை இல்லையென்று கிழவி சொன்னவுடன் நம்பியார் மீண்டும் அவனைக் கூப்பிட்டு இங்கே நான் தான் எல்லாம் அவள் என்ன சொல்லுவது.. நான் சொல்லுகிறேன், உனக்கு பிச்சை கிடையாது என்று கூறுவார்.

அதே போல் கர்நாடகம் என்ன தண்ணீரை மறுப்பது? நாங்கள் சொல்கிறோம் தண்ணீர் தர முடியாது என்று  தமிழகத்தின் உரிமையான  காவிரியை பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளிவிட்டதுமல்லாமல் இவர்கள் அமைக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான மேலாண்மை அமைப்போ அல்லது வாரியமோ அதன் வரைவு திட்டத்தில் மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருக்கும், காவிரி அமைப்பு மேற்பார்வை பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் என்று  மத்திய அரசின் சார்பாக நீர்வளத்துறை செயலர் என்று யு.பி.சிங் கூறியுள்ளார். 

இது தமிழகத்திற்கு செய்யப்பட மிகப்பெரிய மோசடி. 

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்  கர்நாடகம் தண்ணீர் தரவில்லை என்று தானே மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது? இன்னும்  அவர்கள் அதிகாரத்தில் அணைகள் இருக்குமானால் மறுபடியும் முதலில் இருந்தா?

அது சரி.. தேர்தலும் நடத்தியாகிவிட்டது, ஆட்சியையும் பிடித்தாகிவிட்டது, இப்போது கர்நாடக ஆட்சி தானே முக்கியம்...

தமிழகத்தின் முதுகில் குத்திய மத்திய அரசு இப்போது ஒரேயடியாக நெஞ்சிலே குத்திவிட்டது. அடக்கம் மட்டும் தான் செய்ய வேண்டியுள்ளது.

அதற்குத்தான் காவிரி எழவு திட்டம்.

வளர்ச்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - த்தூ

பாஜக அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று அவாள் கூட்டம் கொக்கரிக்கும் நாள் விடியாமலேயே போவதாக. 

கர்நாடக மாநில தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. கள்ளத்தனம் செய்யாமல் ஒட்டுமொத்த மாநிலத்தில் எப்படிடா சாத்தியம்?

தேர்தல் ஆணையத்தால் தயாரித்து கொடுக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைகள்  அச்சு அசலாக ஆயிரக்கணக்கில் பாஜக பிரமுகரின் வீட்டில் கைப்பற்றியபோதே தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து தேர்தல் நடத்தும் பொறுப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும். 

ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் புதிய நோட்டுக்கள் மிகச்சாதாரணமாக கட்டுக்கட்டாய் பிடிபட்ட போது அது எந்த வங்கிக்கானது என்று தெரியாது என ரிசர்வ் வங்கி கள்ள மவுனம் சாதித்ததைப்போலவே இன்று கள்ளத்தனமாக தேர்தலையும் நடத்திவிட்டு பதவியேற்புக்காக ஆயத்த வேலைகளில் இருக்கிறார்கள்.

அவாள் தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று எக்சிட் போல் சொன்னபோதே தெரியும் தேர்தலின் முடிவு பாஜகவுக்கு சாதகம் என்று.

முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு "நாசமாப்போக" என்ற வாழ்த்துக்கள் !!


நிமிர்ந்து நிற்கும் இனி நெடுவாசல்

வாழ்த்துக்கள்...மனமார வாழ்த்துக்கள் ...!!!

நெடுவாசல் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய அத்துணை பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், வலைத்தள பதிவர்கள் என்று அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி..

நீங்கள் வென்று காட்டினீர்கள் 
நாங்களும் மகிழ்கிறோம் 
ஆனந்தக்  கண்ணீரோடு மட்டுமல்ல  
அந்நிய தேசத்தில் இருந்தாலும் 
என் சொந்த தேசம் 
ஒன்றுபட்டு ஓங்கி நிற்கிறது 
தமிழன்டா என்ற கெத்தோடு கூட 


ஏலே ..வரலாறு பேசும் லே..!!! 

திருடன் திருடவும்


திருடன் திருடவும்...

சூது கவ்விய தேசத்தின்
மாலை கவ்வும் நேரம் 
தன்னையும் மண்ணையும் சார்ந்த 
தன்மானக் குடியானதொருவன், 
சந்தையில் வாங்கிய ஆட்டை  
தன் தோளில் தூக்கி
சந்தோசமாய் சென்றான்
தன்  மந்தை நோக்கி ..

மறியைப் பறித்திட 
தீட்டினர் திட்டமொன்றை, 
யோக்கியனென்ற பெயரெடுத்த 
நாலு கடைந்தெடுத்த அயோக்கியர்கள். 

ஒருவன், 
பேரே யோக்கியன் 
தமிழ் தேசியமென 
தம்பட்டம் அடிக்கும் தகர சாமான். 

மற்றவன், 
மகா யோக்கியன் 
மய்யத்தில் நானென்பான் 
எவன் எக்கேடு கெட்டிடினும் 
எப்பக்கமுமில்லை,  நான் மையமென்பான். 

மூன்றாமவன், 
தீவிர யோக்கியன் 
ஆன்மீகப் புயலெனும் 
அமுங்கனிக் கள்ளன்.

அடுத்தவன், 
அதி தீவிர யோக்கியன். 
வளர்ச்சியென்பான் மலருமென்பான் 
வயசுக்கு வராத மொட்டைக்கூட 
கசக்கியெறியும் கள்ளவழி பிறந்த 
தேசபக்த காமுகன். 

நால்வரும் கண்டனர் மறியை 
கால்பங்கு ஆளாளுக்கு, காலோடு சேர்த்து
தனித்தனி செல்வதென முடிவு 
எத்தனித்தனர் எச்சில் ஊற

நாயை சுமப்பதேன் தம்பி.. 
வழிமறித்துக் கேட்டான்
முதலாம் யோக்கியன்,
முன்னோரின் ஓலையின்படி 
முப்பாட்டன் வழி  சொந்தம் 
நான் உன்னுடைய 
அண்ணனென்ற  அறிமுகத்தோடு!.
ஆட்டு மறியை   நாயென விளிக்கும் 
அதிசயப்  பயித்தியமா  நீ 
வழியை விடு என்றவாறே 
வழியைத்  தொடர்ந்தான் - ஆனால் 
அணுவளவு கீறல் அவனுள்ளத்தில் 

சற்று தூரம் கழிய 
மற்ற யோக்கியன் வந்தான், 
மய்யம் என்றவாறே !
பன்றியின் நிறம் கருப்பு - ஆனால் 
கறுப்பெல்லாம் கறுப்பல்லவென்று 
கரகரத்தான் கருஞ்சட்டையோடு ! 
கடுப்படிக்காதே விசயத்தைச்சொல் 
என வீரம் செறிக்க கேட்டவனிடம் 
அறமன்று பன்றியை சுமப்பது 
என்றவாறே ட்வீட்டவும் செய்தான் !!

சிறுகீறல் இப்போது 
சிக்கலாய் விரிந்தது !! 
விறுவிறுவென விற்றவுடன் 
கிளம்பிய வியாபாரியின்  பிம்பம் 
கண்திரையில் சிரித்தது !!
சந்தேகப்பட்டது சரிதானோ 
இல்லை இல்லை இது ஆடுதான் என்றான்
அடிமனதில் ஆட்டத்தை அடக்கிக்கொண்டு.

மூன்றாமவன் வந்தான் 
முப்பது முழ தூரம் கழித்து. 
வாயே தொறக்காதவன், 
வாயைப் பிளந்தான் ஆன்மீக வாடையோடு 
தோளை பார்த்து கத்தினான் 
இமயமலை மீது சத்தியம் 
நிச்சயம் நீ சுமப்பது பாம்பென்று !!

அடிமனதின் ஆட்டம் இப்போ உதறலாய் !!
என்னாச்சு உங்களுக்கென்று 
சில நாழிகை முன் கேட்டவன் 
என்ன நடந்தது எனக்கென்று 
தன்னைக் கேட்டான் சிந்தனையில் !!

கடைசியில் நின்றான் அதிதீவிர யோக்கியன். 
கல்லெறிக்குத் தப்பிய கள்வன் போல,
கத்தினான் கையால் பொத்தியபடி 
காவிப் பற்கள் தெரியாதபடி !!
இந்துவல்லவோ நீ 
அவன் பிணத்தை சுமப்பானேன் 
அசுத்தத்தை சுமக்காதேடா அம்பி !!

உதறல் உள்ளத்துக்குள் ஊக்கமாய் கொதித்தது
உளறல் எனலாம் ஒருவனென்றால்... 
அத்தனை பேரும் பொய்யாகுமோ?
மறியல்ல இது வேறெதுவோ..!! 
இறக்கிவிட்டு  ஓடினான்
தான் வந்த வழி தெறித்தபடி 
தன் நிலை நொந்தபடி 

நால்வரும் கூடினர் 
நாற் பங்காகியது மறி  
அறிந்து கொள் தமிழா 
விழித்துக் கொள் !!

ஆட்டைத் தொலைத்த 
அப்பாவியோடு போகட்டும்,
நாட்டைத் தொலைத்துவிடாதே !

அக்கறையன்று அவர் குரல் !!!
அடித்துச் சொல்கிறேன், 
திருடன் திருடவும் 
கொல்லவும்  அழிக்கவுமேயன்றி 
வேறொன்றுக்கும் வரான்...!!!

அப்பா எங்கே?

அப்பா எங்கே?
நிற்க இடமில்லாமல் 
நீண்ட  ரயில் பயணம் 
கால்கடுக்க நின்று
கால் இடுக்கில் கிடைத்த 
காலடி இடத்தையும் கொடுத்து 
கண்விழித்து 
கலங்காத ராசா என்று 
தட்டிக்கொடுத்து 
நன்றாய் எழுது 
நாளைய தேர்வில் வெல்லு 
நமக்காகும்  நாளை என்றவர்  
என்னையும் கனவையும் 
தன் நெஞ்சில் தாங்கி 
இங்கு தான் எங்கோ நிற்கிறார் 
எழுதிவிட்டேன் நன்றாய் 
என்று சொல்லி மகிழ 
என் அப்பா எங்கே?



தமிழகத்திற்கு பாஜக செய்ததை பட்டியலிடத்தயார் - தமிழிசை


தமிழகத்திற்கு பாஜக செய்ததை பட்டியலிட தயார்.
தமிழிசை சவால் 

இன்றைய (03.05.2018) செய்தி..! 

பட்டியலில் சில.. 



பிரதமர் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் காவிரி மேலாண்மை வரைவு அறிக்கை தாக்கல் செய்ய இயலவில்லை 


தமிழகத்தில் நீட் மையம் அமைக்க இயலாது. மாணவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்று தான் தேர்வு எழுத வேண்டும்


இதுவும் இன்றைய செய்தி தான்..!!!  



படம் சொல்லும் செய்தி


ப.சிதம்பரம்: அது எப்படி அப்பு..மோடி எவ்வளவு ஆப்படிச்சாலும் வலிக்காதது மாதிரி கெத்தா இருக்கீரு.

அத்வானி: ஹா..நீங்க பத்து வருசமா மூத்திர சந்துல கும்முனதுல  இப்பெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குற தெம்பு வந்திருச்சி 


மோடி: எழுதி வைக்காம ராகுல் ஒரு பதினைந்து நிமிஷம்  பேச முடியுமா?

மக்கள்: அண்டப்புளுகு புளுகாம உம்மால ஒரு நிமிஷம் பேச முடியுமா?


மத்திய அரசு: பி.எச்டி முடித்தவர்களுக்கே இனி உதவி பேராசிரியர் வேலை.

பக்தாள்: நிர்மலா தேவி  தேசபக்தியோடு  நாட்டுக்கான சேவைதான் செஞ்சாங்க ன்னு இப்பவாச்சும் தெரியுதா?


வைரல் வீடியோ: ரயில் கழிப்பறையில்  தண்ணீர் நிரப்பிக்கொண்டு தில்லாக சென்ற டீ வியாபாரிகள்.

மக்கள்: டீ விற்றவர்கள் நாட்டிலும்  இப்போ டீ விற்றுக்கொண்டிருப்பவர்கள் பயணிகளிடமும் மோ(ச)டி செய்கிறார்கள். 


திரிபுரா முதல்வர்: எனது அரசில் தலையிட்டால் நகத்தை வெட்டுவேன் 

குருமூர்த்தி: திரிபுரா நிலவரம் தெரிஞ்ச அவரு திரிபுரா மக்களுக்கு சேவை செய்யிறாரு..அமெரிக்காவுக்கல்ல  






துணை ராணுவம் பயிற்சிக்காகத்தான்..பயப்பட தேவையில்லை - ஸ்ரீ எடப்பாடி சாமி அருளுரை



துணை ராணுவம் வந்திருப்பது பயிற்சிக்காகத்தான். துணை ராணுவம் வந்ததைப்  பற்றி பயப்பட தேவையில்லை

- ஸ்ரீ லகுட ஸ்ரீ களவாணி எடப்பாடி சாமி 


அதைத்தான் சாமி நாங்களும் கேக்குறோம், பயிற்சின்னா என்ன விதமான பயிற்சி? இலங்கையில் கடைசி யுத்தம் வருவதற்கு முன் நம் கடல் பகுதியில் பல நாடுகள் இந்தியாவோடு  கூட்டுப்பயிற்சி என்ற பெயரில் திட்டம் தீட்டியதை போன்ற பயிற்சியா..இல்லை இலங்கையில் இரணமடு பகுதியில் ராணுவம்  2006ல் நடத்திய ஒத்திகைப் பயிற்சியா?

அது இருக்கட்டும். தமிழர்கள்  எதற்கும் தயாராகவே இருக்கிறார்கள். 

ஆனால் துணை ராணுவம் வருவது முறைப்படி முதலமைச்சருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லையாமே? இதை விடவும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை அவமதிக்க முடியுமா?

ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்கவும் வராது வந்த மாமணி போல் வந்த  முதலமைச்சர் பதவியில் கூடுமான வரை அனுபவிப்பதற்காக எதையும் செய்யத் தயாராகிவிட்டீர்கள் சாமி ? 

ஒரே ஒரு வேண்டுகோள்..வள்ளுவன் வாயிலாக.. 

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே 
கெட்டான்  எனப்படுதல் நன்று.

விளக்கம்: மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

உண்மையிலேயே சாமியாகிவிடுங்கள் சாமி.





வைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் - பொன்னார்


செய்தி: பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மேலே உள்ள படத்திலுள்ள நபர் வைகோ தன் மீது கல்வீசினவர்களை "பாஜகவின் கைக்கூலிகள்" என்று கூறியதற்கு கண்டனம் (இணைப்பு)

- அதானே, நாலு மாசம் சம்பள பாக்கி (எனக்கும் சேர்த்து தான்) வைத்திருப்பது தெரியாமல் இன்றைக்கும் கைக்கூலிகள் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?..  

உசிலம்பட்டி வட்டாரங்களில் மரத்தடி நாட்டாமை பஞ்சாயத்துகளில் நடந்த ஒரு  நாட்டாமை தீர்ப்பு "அவன் உன்னை அடிச்சிருக்கலாம் ..அதுக்காக அவரை  போடா ன்னு எப்படி மரியாதை இல்லாம நீ சொல்லலாம்? இருநூறு ரூவா அபராதம் கட்டிட்டு அவரு கால்ல விழுந்து மன்னிப்பு கேளு" 

அதே போல, மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தான ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் பேரணி சென்ற வைக்கோ மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது மற்றும் எச் ராஜா, எஸ்.வி சேகர் போன்ற வெறியர்கள் வன்மமாக, ஆபாசமாகப்  பேசுவது தவறில்லை. 

காவிக்கொடியுடன் வந்து கல்வீசிய அவர்களை பாஜகவின் கைக்கூலிகள் என்று கூறியது தான் தவறு. 









கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை


யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.. 
ஓட்டு மிஷின் மோசடி வரும் பின்னே 
கருத்துக்கணிப்பு வரும் முன்னே.

இதோ வந்து விட்டது..!

இந்தியா முழுவதும் ஒவ்வொரு துறையிலும் நாறிக்கொண்டிருக்கும் பாஜகவின் ஆட்சி அலங்கோலத்தைக் கண்ட பின்னும் கர்நாடக மக்கள் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக ஜெயிக்க வைப்பார்கள் என்றால்  இவர்களால் 'தயாரிக்கப்பட்ட' ஓட்டு மெஷினே கூட நம்பாது.

தொங்கு சட்டசபை அமையும், ஆனாலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கேப்பையில் நெய் வடிக்கும் செயலை தொடங்கி விட்டார்கள்.

இன்னும் இரண்டொரு நாட்களில் வேறொரூ மீடியாவை வைத்து பாஜக குறைந்த  இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியமைக்கும் என்று எருமையை ஏரோப்பிளேன் ஓட்ட வைப்பார்கள்.

கடைசியில் அடிமை  தேர்தல் ஆணையத்தின் முழு ஒத்துழைப்போடும் பாதுகாப்போடும் தங்களுடைய ஓட்டு மெஷினை வைத்து "கேக்குறவன் மட்டுமல்ல .. கேக்காதவனும் கேனையன்" அப்படின்னு வழக்கம் போல வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றின்னு கொக்கரிப்பார்கள்.

கர்நாடக மக்கள் வீறு கொண்டு எழுந்து புரட்சி செய்வார்களா? 

ஓட்டு மெஷினில் ஒரு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகளுக்கு மட்டுமே மோசடி செய்து வைத்திருப்பார்கள்.  பதிவாகும் வாக்குகளில் ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் தாமரைக்கு எதிராக விழுந்தால் காவி பூனைக்கு மணி கட்டுவது மட்டுமல்ல வாயில் பசுவின் கோமியத்தையும் வைக்கலாம்.

செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.


ராம ராஜ்யத்தில் "ஆசிபா" க்கள்


மோடி ராஜ்ஜியத்தில் இந்தக் கதியென்றால்
தவமிருந்த காரணத்துக்காய் தலை கொய்த
ராமனின் ராஜ்யத்தில்
தமிழிசை கூட தப்புமா? - இல்லை 
வானதியும்  தான் வாழமுடியுமா?

இந்துக்களாய்  சேர்வோம்
ராமராஜ்யம் அமைப்போம் - என்று
வீரியம் பேசினவன்
தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கெதிராக
துப்பாக்கி கொண்டு துரத்தினான்
வீதி வீதியாய் !

சுத்தமில்லை நீ சூத்திரன் என்றான்
சுத்தமில்லாமல் ஒரு சத்தமுமில்லாமல்
கடவுளென்று நீ கருதும் 
கருவறையை பள்ளியறையாய் மாற்றி
கயமைத்தனம் செய்தான் !!

காக்க வேண்டும் கலாச்சாரம் 
காவி தான் ஒரே தேசத்தின் ஆச்சாரம் 
காவல் தெய்வம் என்றான், 
கற்பழிக்கப்பட்டவள் தந்தையை
காவல் நிலையத்தில் கொன்றான் !!!

இத்தனை நடந்தும் வாய் திறக்கவில்லை இதுவரை
பத்து லட்ச ரூபாய் கோட்டு  கட்ட  துரை 
இந்துக்கள் இந்துக்கள் என்று சொல்லி 
இல்லாதவன் பணத்தையெடுத்து 
இருப்பவனிடத்தில் கொடுத்தான் அள்ளி !!!

விழித்துக்கொள் தமிழா இந்துவல்ல நீ 
சூத்திரன் என்று குனியும் நேரம் இதுவல்ல.
வினை செய்,  விளையச் செய்
அழித்து விடும் அதிகாரம் 
எனக்கென்ன என்றிருந்தால்  !!













பூனைக்குட்டி வெளியே வந்ததா? - டிடிவி

பாஜகவின் ஸ்லீப்பர் செல்

அசுர பலத்திலும் அக்கிரம சிந்தையிலும் நிறைந்திருக்கும் மத்திய பாஜக அரசை மிகவும் கூலாக எதிர்கொள்கிறார், இவர்தான் மாவீரன் என்று பாஜக சார்பு ஊடகங்கள் மூலம் கட்டியமைக்கப்பட்ட பிம்பம் தான் இந்த டிடிவி தினகரன் என்று எத்தனை முறை சொன்னாலும் அடங்காத அதிமுகவினர் இன்றைக்கு இலேசாக தலையை சொரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்கள்.

பிரதமரின் தமிழக வருகையை ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல, வடமாநிலத்தவரும் கூட இன்னும் வெளிநாடு வாழ் தமிழர்களும் ஓட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்காத கட்சிகள் ஒன்று பாஜக, மற்றொன்று டிடிவி....!!! (எடப்பாடி குரூப் ஏற்கனவே பாஜகவில் அடக்கம்) 

ஜெயாவின் மர்மமான  மறைவிற்கு பின் ஒட்டுமொத்த அதிமுகவும் கிட்டத்தட்ட சிதைந்தடைந்து மாற்றுக்கட்சி தேடத்தொடங்கியபோது  கட்சியை காப்பாற்றுவதற்காக,  ஒட்டு வங்கிக்காக, அவர்களை வைத்து காரியம் சாதிப்பதற்காக  மத்திய பாஜகவினால் திட்டமிட்டு  அதிமுகவுக்கு ஒரு வலுவான தலைவன் என்ற பிம்பத்தை ஏற்படுத்த நடத்தப்பட்ட நாடகத்தின் கதாநாயகன் தான்  இந்த டிடிவி தினகரன்!! . வில்லனாக வேஷம் போட்டவர்கள் தான் ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் ..!!

கைது டீலிங் பேசவும்,  சிறையில்  ஒத்திகையும், ரெயிடும் ஊடக வெளிச்சமும் ஆரம்பக் காட்சிகள் என்று திட்டமிட்டபடி நடந்தது.

ஆர்கே நகர் தேர்தலில் முதல் தடவை நடந்த போது பணம் கொடுத்ததற்காக தேர்தலையே நிறுத்தி வைத்த ஆணையம் பின்பு நடந்த தேர்தலில் போத்திக் கொண்டு உறங்கியதற்கு காரணம்  பாஜகவின் ஆணைப்படி டிடிவியை மக்கள் செல்வாக்கு உள்ளவராகக் காண்பிப்பதற்கே..

நேர்மையும் மனச்சாட்ச்சியுமுள்ள நபர்கள் அதிமுகவில் உண்டு. 

அறிந்து கொள்ளுங்கள் இந்த பாஜகவின் ஸ்லீப்பர் செல்லை.







ஒரே வாரத்தில் 8,50,000 கழிப்பறைகள்..!

அண்டப்புளுகு ஆகாசப்புளுகெல்லாம்
ஓபிஎஸ் இபிஎஸ்  போன்று, 
இரண்டும்  இவர் கால் தூசு போன்று.

ஒரு வாரத்தில் எட்டரை லட்சம் கழிவறை
ஆரவாரத்தில்  அவாள் கூட்டம் அலப்பறை 
எப்படிடா சாத்தியம் அருவருப்பின் மொத்தமே
கப்படிக்கும் நாற்றமடா கருநாகம் உன் சத்தமே

ஓரடிக்கு ஓரடி கட்டினாலும் ஓராயிரம் கூடி நின்றாலும்
கணக்கு உதைக்குதடா தள்ளுபடியான கடன் போல
கட்சிக்கு வந்த ஆயிரம் கோடி  நிதி போல

பதவிக்கு வந்தால் பதினைந்து லட்சம்
முதலாண்டு முடிந்தால் ஒரு கோடி வேலை
கறுப்புப்பணம் மீட்க பணமதிப்பிழப்பு 
காவிரியில் எங்களுக்கு கழுத்தறுப்பு

பொய்யுரை நம்பலாம் வடநாட்டில்
மயிரத்தான் மலரும்  எம் தமிழ்நாட்டில்






சமாதானப் புறா - மகா ப்ரபு சிம்பு


மவுனப்போராட்டம் என்று நடிகர்கள் தடுப்பாட்டம் ஆடியதைக் கூட ஒரு வகையில் சகித்துக் கொள்ளலாம்.  அவன் தொழில் எந்த விதத்திலும் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான். 

ஆனால்,  ஒரு நடிகனின் அடிப்படை அரசியல் அறிவும்,  தமிழ் சமூகம் சந்திக்கும் எந்தப் பிரச்சினையும்  குறித்தான அவனது பார்வையும் அணுகுமுறையும் எந்த அளவுக்கு பெலவீனமானது என்பது மட்டுமல்லாமல் எவ்வளவு ஆபத்தானது போன்றவை அவ்வப்போது சில  நடிகர்கள் மூலம் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

அதிலும் மேலாக,  கிட்டத்தட்ட ஒரு மனநிலை சரியில்லாத மனிதனா இல்லை இவனுக்கு தெரிந்ததே இவ்வளவு தானா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு  நேற்றைய  பிரபல விரல்வித்தை நாயகனும் பரம்பரை சொடக்கு போடும் வல்லுநருமாகிய சிம்பு என்ற அறிவாளி பேசுவதை பார்க்க வேண்டிய அவலத்தை அவனிடம் மைக்கை நீட்டிய ஊடகங்கள் ஏற்படுத்திவிட்டது.

பிரபலம் என்பதற்காக இப்படியா ஒரு குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத நபரிடம் மைக்கை நீட்டுவீர்கள்?

நதி நீர் பங்கீடு குறித்த சர்வ தேச சட்டம் கிலோ என்ன விலைன்னு தெரியுமா? காவிரி பிரச்சினை பற்றிய ஒரு சதவீத அறிவு இல்லாமல் இருக்கும் அவன் பேசலாம்..நீங்கள் மைக்கை நீட்டலாமா?

அன்பா கேட்கணும்னு சொல்லிட்டு ஊடகங்களை "அடி ரா"  என்று துரத்திவிட்டான் பார்த்தீர்களா?

கேனப்பய ஊருக்குள்ள கிறுக்குப் பய நாட்டாமை.



காவிரி விவகாரத்தில் திமுகவின் துரோகம்?


திமுக ஏன் அதிகாரத்தில் இருக்கும் போது  காவிரி நீரை பெற்றுத்  தரவில்லை? திமுக கபட நாடகம் ஆடுகிறதா? 

...என்று மிக  அப்பட்டமான பொய்யை திரும்பத் திரும்ப மக்கள் மனதில் அடித்து அடித்து ஏற்றிக்   கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஒரு மிகவும் எளிமையான ஒரு பார்வை. 

நேர்மையாளனாக சிந்தியுங்கள்.

இப்போது (02.04.2018) எதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னது யார்?

உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் ஏன் அமைக்கச் சொன்னது?

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லியதால்.

காவிரி நடுவர் மன்றம் என்ன, எப்போது இறுதித்தீர்ப்பு வழங்கியது?

திமுக 1989-1991 ஆட்சியால் 1991 ஜூன் 25ல் 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. (1991 ஜூன் 24ல் ஜெயலலிதா முதல்முறையாக ராஜீவ் மரண அலையில் ஜெயித்து முதல்வராக பதவி ஏற்றார். மறு  நாள் தீர்ப்பு. இதில் அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

சரி, காவிரி நடுவர் மன்றம் ஏன் இடைக்கால தீர்ப்பை வழங்கியது?

நடுவர் மன்றத்தில் வழக்கு முடிய நீண்ட காலம் ஆகும். எனவே இடைக்கால நிவாரணமாக ஒரு ஏற்பாடு செய்யவேண்டும் என திமுக ஆட்சியில் வழக்கு தொடுக்கப் பட்டதால் நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது.

சரி, அந்த காவிரி நடுவர் மன்றம் எப்போது, யாரால் அமைக்கப் பட்டது?

திமுக ஆட்சியில் 1990 ஜூன் 2ம் தேதி, மத்தியில் திமுக கூட்டணி அங்கம் வகித்த தேசிய முன்னணி அரசால் அப்போதைய பிரதமர் வி.பி. சிங் அவர்களால் அமைக்கப் பட்டது.

சரி..இப்போ சொல்லுங்கள். இதில் திமுக எங்கே துரோகம் இழைத்தது?


பேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் மோடி


4 தேர்தலில் மோடியின் வெற்றிக்கு உதவினோம்.. பாஜக பற்றி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா திடுக்கிடும் தகவல்! பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. 

இந்த முறைகேட்டில் பாஜக கட்சிதான் முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' என்ற நிறுவனத்துடன் பாஜக கட்சிதான் தொடர்பில் இருந்துள்ளது. இதை 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் இந்திய சிஇஓ ஒப்புக்கொண்டதும் பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. 

அமெரிக்காவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் பாஜகவை சேர்ந்த மோடி மட்டுமே. 2014 தேர்தலில் உதவியதற்கான நன்றிக் கடன்தான் இந்த சந்திப்பு என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. மேலும் இதில் நிறைய பணம் கைமாறி இருக்கலாம் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. 

இதே சமயத்தில் 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் 'லிங்க்டின்' பக்கத்தில் முக்கியமான தகவல் இருக்கிறது. அதில் நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக நாங்கள் உதவி செய்தோம். அதன் மூலம் பாஜக கட்சி வெற்றி பெற்றது என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறது. 

இந்த 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் மூலம் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும் பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றி உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங்தான் அதிக நெருக்கமாக இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...