மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

பார்ப்பனீயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்ப்பனீயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நீட் எனும் மோசடி


ஆச்சரியம் என்னவென்றால், தலைக்கு 15 லட்சம் டெபாசிட் தொடங்கி, சர்ஜிக்கல் ஸ்டிரைக், பர்மாவில் நூறு தீவிரவாதிகள் சுட்டதாக பீலா, கறுப்பு பணம் மீட்பு, தேர்தல் கமிஷன், நீதித்துறை, பணமதிப்பிழப்பில் ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்ற பணத்தை எண்ணிக்கொண்டே இருப்பது,  பின்வாசல் வழி ஆட்சி, கவர்னர் ஆட்சி, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் குறித்த நீதிமன்ற வேஷங்கள் என்று விடிந்தது முதல் அடையும் வரை ஓயாமல் அண்டப்புளுகு புளுகிக்கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வில் மட்டும் நியாயமாகவா நடந்து கொள்ளும்?

நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் எல்லாரும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருப்பதால் தான் வேண்டாம் என்கிறார்கள். இன்னும் சிலர் மாநில பாடத்திட்டத்தில் இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் எந்த பாடத்திட்டத்தில் இருந்தாலும் நீட் தேர்வு என்பதே மோசடி செய்யத்தான்  கொண்டு வருகிறார்கள் என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

இந்த வருட தேர்வு முடிவுகளில்  உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்கள் தமிழகத்தை விட மிக அதிக தேர்ச்சி விகிதத்தை கங்கையில் மிதக்கும் சடலம் கூட நம்பாது.

குறைந்த முதலீடு, குறுகிய காலத்தில் அதிக லாபம் என்று சொல்லி பைனான்ஸ் கம்பெனிகள் பணத்தை உருவிக்கொண்டு ஓடியதைப்போல தரமான மருத்துவர்கள் என்று சொல்லி தலையில் நீட் எனும் மிளகாயை அரைத்து விட்டார்கள்.

உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பைக்கொண்ட தமிழகத்தில் நீட் எனும் பெயரால் வடமாநிலத்தவர் பயன்படுத்திக்கொள்ளவே இந்த நீட்  தேர்வு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. 

நீ அரிசி கொண்டு வா 
நான் உமி கொண்டு வாரேன்  
ரெண்டையும் கலந்து ஊதி ஊதி தின்போம் 

என்பது போல் நீட் தேர்வு நம் மக்களின் உரிமையை அனுபவிக்க அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தாகிவிட்டது..இனிமேல் பறிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

மநு தர்மமே குறிக்கோள் - ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம்


இந்திய விமானப்படையில் பணிசெய்து கொண்டிருக்கும்போது,  ஆர் எஸ் எஸ் (Rashtriya Swayamsevak Sangh) பிரச்சாரம் செய்த கொள்கைகளைப்பார்த்து தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பணியை  விட்டு விட்டு ஆர் எஸ் எஸ் ஸில் முழுநேர பணியாளராக சேர்ந்து பதினைந்து வருடங்களாக வேலை செய்கிற ஒரு  ஆர் எஸ் எஸ் காரர் வாக்குமூலத்தை  மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த நம் நண்பர் வாட்ஸாப்பியிருந்தார். 

மிகச்சரியான வார்த்தைப்பிரயோகம் இல்லாவிட்டாலும் அவர் சொல்ல வந்த கருத்தை என்  நடையில் மொழிபெயர்த்துள்ளேன். 

நிருபர்: என்னோடு கூட ஆர் எஸ் எஸ் ஸில் கிட்டத்தட்ட 15 வருடமாக பணிசெய்யும்  நபர் இருக்கிறார்.  ஆர் எஸ் எஸ் பற்றி இவரிடம் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பெயர் என்ன?

நான்..விஜய் காஷ்யப் , பீகாரிலிருந்து வருகிறேன். இந்திய விமானப்படையில் ஏவுகணை செலுத்தும் பொறியாளராகப் பணியாற்றினேன். தேசத்திற்காக  சமூக சேவையே சிறந்தது என்று அந்த பணியை விட்டு விட்டேன். அதன் பின்பு ஆர் எஸ் எஸ் என்பது தேச நன்மைக்காக இருக்கிற தன்னார்வ நிறுவனம் என்று கருதி அதில் சேர்ந்து பதினைந்து வருடம் சேவை செய்து கடைசியில் இந்திய அளவில் தொழில் துறை தலைவர் என்ற நிலையில் இருந்தேன்.  ஆனால் எந்த நோக்கத்திற்காக விமானப்படை பணியைத் துறந்தேனோ அந்த வழியில் ஆர் எஸ் எஸ் செல்லவில்லை என்பதை புரிந்துகொண்டேன். 

(நிருபர் குறுக்கிட்டு): ஆர் எஸ் எஸ் எந்த வழியில் செல்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

தேசத்தின் 90 சதவீத மக்களுக்கான நன்மைக்கான எந்த நோக்கமும் ஆர் எஸ் எஸ் ஸிடம்  கிடையாது. அதனால் அங்கேயிருந்து ஏமாற்றமடைந்து...

(நிருபர் குறுக்கிட்டு): அப்படியானால் யாருடைய நன்மைக்கான திட்டம் வைத்திருக்கிறார்கள்?

தங்களுடைய நன்மைக்கான திட்டம் மட்டுமே..எப்படி டாட்டா ஒரு பொருளை தன்னுடைய லாபத்திற்காக உற்பத்தி செய்கிறதோ  அப்படி..

அப்படியானால் எந்த மக்களுக்கான நன்மைக்கானது அவர்களின் நோக்கம்?

ஆர் எஸ் எஸ் ஸின் வரலாற்றை  பார்த்தோமானால் தங்களை நிலை நிறுத்தவும் தங்களுடைய யோசனையை நிலைநிறுத்தவும் நூற்றாண்டுகளாக  பாரதத்தில் 4500 - 5000 வருடங்களாக  எந்த மனப்பான்மை  அடிமைத்தனத்தை ஏற்படுத்தி வைத்திருத்திருக்கிறதோ ...

(நிருபர் குறுக்கிட்டு): எந்த மனப்பான்மை என்று தெளிவாக சொல்லுங்களேன்.. 

பாருங்கள்.. ஆர் எஸ் எஸ் என்பது உலகத்தின் பல இடங்களில் நிறைந்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எனக்கு பதினைந்து வருடமாகியது. நான் ஏன் வெளியேறினேன் என்பதை நீங்கள் நுட்பமாக அறிந்து கொள்ளவேண்டும். எந்த தேசத்தின்  சமூக சேவை செய்வதற்காக நான் விமானப்படை பணியையே  விட்டுவந்தோனோ அந்த தேசத்தின் சேவை செய்வதற்கான எந்த திட்டமும் இங்கேயில்லை.

ஆர் எஸ் எஸ் ஸில்  எந்த திட்டம் உங்களுக்கு பிடிக்கவில்லை?

பாரதிய ஜனதா கட்சி வளர்ந்திருக்கிறது. தேசத்தின் சேவைக்காக ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரையும்  கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் நிறைய நல்லவர்கள் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தேசத்தின் சாமானியனாகிய தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களைக்குறித்து  அக்கறை கொள்வதற்கு  எந்த திட்டமும் இல்லை.

அப்படியானால் யாரைக்குறித்து அக்கறை கொள்கிறார்கள்? பதினைந்து வருடங்கள் இருந்ததால் தெரியுமல்லவா?

இந்து மதம் , இந்து ராஷ்டிரத்தைக்குறித்து பேசுகிறார்கள். இந்து மதம் என்பது இவ்வளவு சிறந்ததாக இருக்குமென்று சொல்வேனேன்றால் , லட்சக்கணக்கான இந்துக்களாகிய ஏழைகள் சாமானியர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள்  குறித்து சிந்திக்க வேண்டும்.

நீங்கள் ஆர் எஸ் எஸ் ஸில் சேரும்போது அவர்களுடைய வேலை என்ன என்று உங்களுக்கு தெரியாதா?

தேசத்திற்காக தன்னார்வ  சேவை (RSS) என்று அவர்கள் எழுதியிருக்கிறார்கள், ஆனால் தேசத்தின் சேவை என்ற பெயரில் நடக்கிறது  எதுவோ..

(நிருபர் குறுக்கிட்டு): எது நடக்கிறது என்று மக்களுக்கு சொல்லுங்கள்..

மநு ஸ்மிரிதி யை திரும்பவும் இந்தியாவில் நிலைநிறுத்தவும்,  பிராமணர்களை மீண்டும் ஆதிக்கத்தில் கொண்டு வரவும்,  ஒற்றை வரியில் சொல்லவேண்டுமென்றால் இரண்டரை சதவீதமாகிய அவர்கள் மீதி தொண்ணூற்றி ஏழரை சதவீத மக்களை எப்படி  ஆளுகை செய்வது என்பதே ஆர் எஸ் எஸ் ஸின் திட்டம்.

அவர்களுடைய கூட்டங்கள் நடக்கும்போது இதுகுறித்து விவாதிப்பார்களா?என்ன விவாதிப்பார்கள்?

ஆர் எஸ் எஸ் ஸிடம் உள்ள மறைக்கப்பட்ட எதோ திட்டம் உள்ளதுபோல ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆனால் செய்கிற காரியங்களிலிருந்து அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த தேசத்தின் லட்சக்கணக்கான மக்கள் உயிரையும் கொடுத்திருக்கிறார்கள். நான் விமானப்படையின் பணியை விட்டுவிட்டு சேவைக்காக வந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் நோக்கமெல்லாம் இந்து ராஷ்டிரம்.. இந்துராஷ்டிரம்.. என்பதுதான்.  இந்தியா.. இந்தியா என்று சொல்லி இந்தியாவின் நன்மையை  குறித்து சிந்திப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. 

அப்படியென்றால் என்ன கொள்கை அவர்களுக்கு?

அவர்கள் அவர்களுக்காகவே கடையை திறந்திருக்கிறார்கள்...மநு ஸ்மிருதியை வியாபாரம் செய்கிறார்கள். மநுஸ்மிருதி சொல்கிறது பிற்படுத்தப்பட்டவனும் தாழ்த்தப்பட்டவனும் ஒடுக்கப்பட்டவனும் நம் காலின் செருப்பு போன்றவர்கள். அவர்கள் செருப்பாகவே இருக்கவேண்டும்.

என்ன சொல்கிறார்கள் என்று சொல்லுங்கள்..நீங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்..பின் எப்படி பதினைந்து வருடம் இருந்து  இந்திய அளவில் துறை  தலைவராக உயர்ந்தீர்கள்?

நான் தேசத்தின் சேவைக்காக சென்றேன். 

அப்படியானால் நன்றாக சேவை செய்ய வேண்டியதுதானே?

ஆர் எஸ் எஸ் ஸில் உள்ள நல்ல விஷயம் என்பது ஒருவனை நல்ல தலைவனாக உருவாக்குவார்கள். ஆனால் தேசத்திற்காக அல்ல..தங்களுடைய அமைப்பிற்காக மட்டுமே. தேசத்தின் சேவை செய்ய விடவும் மாட்டார்கள்.  நான் தேசத்திற்காக மரிக்கவும் தயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட படிப்பினையை அவர்கள் கற்றுத்தருவார்கள். ஆனால் சாமானியனுக்காக உழைப்பதற்காக அல்ல தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மட்டுமே.

இஸ்லாமியர்களைக்குறித்து என்ன விவாதிப்பார்கள்?

இந்தியாவில் இருப்பவன் எல்லாருமே இந்துக்கள் தான். இஸ்லாமியர்களும் இந்துதான். அதெப்படியாகும்? அவர்கள் எப்படி இந்துக்கள்? இவர்கள் இந்து.. இந்து மதம்  என்று தேசம் முழுவதும் ஓங்கி ஒலிக்க செய்கிறார்கள். ஆனால் இந்து என்ற வார்த்தையே ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்றவற்றில் கிடையாது. 

உங்களைப்போன்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன விதமான மரியாதை?

அதைக்குறித்து யோசித்தால் அந்த அமைப்பிலேயே நான் இருக்க முடியாது. தகுதியில்லாத நபர்களெலாம் தலைவராக வருகிறார்கள்.

ஏன் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மோடியை பிரதமராக ஆக்கவில்லையா?

இல்லை..அவரை தலைவராக ஆக்குவதற்கென்றே பிற்படுத்தப்பட்டவரென்று மாற்றினார்கள்..ஆனால் அவர் பிற்படுத்தப்பட்டவர் இல்லை. சில வருடங்கள் முன்பு அவர் பிற்படுத்தப்பட்டவர் இல்லை.

உங்களுடைய கோரிக்கை என்ன?

என் விஷயமாக மோகன் பாகவத்திடம் சொல்லுங்கள். இந்த அமைப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடமே இல்லை.

தலித்துகள்?

அவர்களைக்குறித்த கேள்வியே கிடையாதே..

கடைசியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஆர் எஸ் எஸ் என்பது தேசத்திற்கான சேவை செய்வதல்ல..இது மநுஸ்மிருதி சேவை..பிராமணர்களுக்கான சேவை..இரண்டரை சதவீதமுள்ள அவர்கள் மீதி தொண்ணூற்றி ஏழரை சதவீதத்தினரை எப்படி ஆளுகை செய்யலாமென்ற சேவை மட்டுமே.

காணொளி இணைப்பு

ஏ... வேற ஏதாவது கேள்வி இருக்கா?

இருக்கு ..ஆனால் காலம்சென்ற நடிகை சௌந்தர்யா சம்பந்தமாக பொது  வெளியில் உம்மிடம் கேட்பது அவ்வளவு நியாயமாகவா இருக்கும்?
அதனால் உமது பேட்டியிலிருந்தே சில கேள்விகள் .. 

சமூக விரோதிகள் காவலர்களை அடித்தபின்புதான் கலவரம் உருவாகியதென்று நேரில் பார்த்தவரைப்போல் அறுதியிட்டு கூறுகிறீர் ..
சமூக விரோதிகள் காவலர்களை அடித்ததால் காவலர்களுக்கு கோபம் வந்து பொது மக்களை சுட்டுவிட்டார்கள் என்பதுதானே அர்த்தம்? 

சமூக விரோதிகள், காவலர்களை அடிப்பதற்கு பதில் நேரடியாகவே மக்களை அடித்திருக்கலாம் தானே..கலைஞர் கைது சம்பவத்திற்கு பின்பு நடந்த பேரணியில் ஜெயலலிதா அப்படித்தானே அயோத்திக்குப்பம் வீரமணியை வைத்து ஏற்பாடு செய்திருந்தார்?

சமூக விரோதிகள் காவலர்களை அடித்தால் அவர்களைத்தானே சுடவேண்டும்? செத்தது சமூக விரோதிகளா? 

ஆம் என்றால் சமூக விரோதிகள் செத்ததற்கு நீர் ஏன் 'சுட்டது காட்டுமிராண்டித்தனம்'  என்று போனவாரம் பினாத்தினீர்? 

ஐயா.. உச்ச நடிகரே சில வார்த்தைகள்  உங்களுக்கு ...எங்கள் ஐயன் வள்ளுவன் வாயிலாக..

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப் படும் 
நடுவுநிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும் 

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் 
மனம்போல வேறு படும் 
இனம்போலவே இருந்து உண்மையில் இனமல்லாதவரின் நட்பு பொது மகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும் 

இணையதளம் பக்கம் சற்று எட்டிப்பாரும் எம் தமிழக மக்கள் உமது பேச்சுக்கான  எதிர்வினையை 
"செய்து" இருக்கிறார்கள். அறிந்து கொள்வீர் நீர் எமக்கு யாரென்று...

நாங்கெல்லாம்...!

உச்சத்தில் எரிபொருள்  விலை 
இருளில் இந்தியா..! 
சமாதியில் சிறுதொழில்
தீவிர சிகிச்சைப் பிரிவில்
நீதித்துறை !
இத்தனைக்கும் காரணம்....?
வேறே யார்?
காங்கிரஸ்  தான்!!
- ரஷ்ய அதிபரிடம் இந்திய அதிபராக பரிணாமமடைந்தவர் கவலை. 
-------------------------------------------------------------------------------- 
விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் காங்கிரஸ்தான். ஆம் 100 கோடிக்கும் கூட எம் எல் ஏ க்களை வாங்கமுடியாததற்கு காரணம் காங்கிரஸ்தானே ! 
- அமித்ஷா ஆக்ரோஷம். 
---------------------------------------------------------------------------------
அவாளா இருக்கணும் 
இல்ல.. அவா ஆளா இருக்கணும்..! 
-குடிமைப்பணிக்கு புதிய தேர்வுமுறை அறிமுகப்படுத்தவுள்ளதாக மத்திய அரசு தகவல். 

---------------------------------------------------------------------------------
கர்நாடகத்தில் ஜனநாயத்தை நிலைநாட்டியது உச்சநீதிமன்றம்; செய்தி 
- ஆசையை தூண்டுனாத்தானே ஏமாற்றமுடியும்...முழுக்குடுமியையும் காட்டினா முக்கியமான நேரத்துல நாட்டாமை பண்ணுவதெப்படி?

---------------------------------------------------------------------------------
காரணமில்லாமல் மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை செய்யமாட்டார்கள்; ரஜினி  
-  எதற்குமே வாயைத்திறக்காத  நீர் இதற்குமட்டும் கருத்துச்  சொல்லக்  காரணம்? 

---------------------------------------------------------------------------------

நெசம்மாவே நடந்திருச்சா எடியூரப்பா

நாசமாப்போக என்று மனசு நிறைஞ்சு (?) வாழ்த்துனதுல இப்போ நிலவரம் அப்படியே ஆயிடுச்சி போல குருநாதா?

பின்வாசல் வழியாவே இதுவரை வாழ்ந்த நம் கட்சிக்கு பின்னாலே குத்திட்டாங்களே குருநாதா...

அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே ...(பின்னணி இசை)


 ..மாட்டுக்குள்ளதையும் மனுஷனுக்குள்ளதையும்  சேர்த்து  வச்சி பூசிட்டாங்களே..!
மேகலாயாவுலயும் கோவாவுலயும் செஞ்சத பார்த்து இப்படி செஞ்சுப்புட்டாங்களே ...
பதவியேற்குமிடத்துக்கு குடுத்த அட்வான்ஸ எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு திருப்பி கேப்பேன்?

அந்த குமாரு பயபுள்ள நல்லா இருப்பானா..
நான் கொடுப்பேனடா எத்தனை கோடின்னாலும் ..நம்ம ரெட்டி காரு கொடுப்பாரேடா கொமாரு நீ நல்லா இருப்பியா?

காவிரி தண்ணிய தராம இருக்க வரைவு திட்டம் செஞ்சோமடா  பாவி இப்போ என் எங்க கண்ணுல தண்ணிய வர வச்சி பிளான் பி திட்டத்தை செஞ்சுப்புட்டாங்களே கொமாரு ...

ஆமா ஓட்டு மெஷின்ல அந்தக் குத்து குத்தியுமா நாங்க தோத்துட்டோம்? கள்ளத்தனம் செய்யாம இருந்திருந்தா இந்நேரம் நாறியில்ல போயிருக்கும்..

வளர்ச்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - த்தூ

பாஜக அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று அவாள் கூட்டம் கொக்கரிக்கும் நாள் விடியாமலேயே போவதாக. 

கர்நாடக மாநில தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. கள்ளத்தனம் செய்யாமல் ஒட்டுமொத்த மாநிலத்தில் எப்படிடா சாத்தியம்?

தேர்தல் ஆணையத்தால் தயாரித்து கொடுக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைகள்  அச்சு அசலாக ஆயிரக்கணக்கில் பாஜக பிரமுகரின் வீட்டில் கைப்பற்றியபோதே தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து தேர்தல் நடத்தும் பொறுப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும். 

ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் புதிய நோட்டுக்கள் மிகச்சாதாரணமாக கட்டுக்கட்டாய் பிடிபட்ட போது அது எந்த வங்கிக்கானது என்று தெரியாது என ரிசர்வ் வங்கி கள்ள மவுனம் சாதித்ததைப்போலவே இன்று கள்ளத்தனமாக தேர்தலையும் நடத்திவிட்டு பதவியேற்புக்காக ஆயத்த வேலைகளில் இருக்கிறார்கள்.

அவாள் தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று எக்சிட் போல் சொன்னபோதே தெரியும் தேர்தலின் முடிவு பாஜகவுக்கு சாதகம் என்று.

முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு "நாசமாப்போக" என்ற வாழ்த்துக்கள் !!


இந்துக்களே ஒன்றுபடுங்கள்..!

எழுச்சி தொடரட்டும்..!!! சிலைகளை கடத்தும் கும்பல்களுக்கு உடந்தையாக இருக்கும் குடுமிகளுக்கு எதிராக இந்துக்களாய் ஒன்றுபடுவோம்..!!
















தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலிருந்து 1262 சாமி சிலைகள் மாயமாகி (திருடப்பட்டு) இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 

வைரமுத்துக்கு எதிராக எழும்(ப்)பிய எழுச்சி தொடரட்டும். ஜீயர்களே, எச்சகளே, நித்தியின் ஆன்மீக சிஷ்யைகளே, இந்துக்களே..பொங்குவோம் வாருங்கள். பொங்கச்சோறு தின்றது போதும்.

இந்த பழங்கால சிலைகளுக்கு வெளிநாட்டில் அதிக விலை கிடைக்கும் என்பதால் சமூக விரோதிகள், உள்ளே இருக்கும் குடுமிகளின் துணையோடு அவற்றை கடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

எனவே தொடரட்டும் நம் போராட்டம்.

















பக்தர்கள் இதுகுறித்து வருத்தத்தோடு ஆன்மீகப் பெரியவர்கள் எது  எதற்கோ தேவையில்லாமல் போராடுகிறார்கள். உண்மையில் அவர்கள் போராடவேண்டிய விஷயம் இதுதான். மீதமுள்ள சிலைகளையாவது பாதுகாக்கலாம் என்றனர். 
செய்வேளா...???? 

ரெங்கராஜ் பாண்டே - கேள்விகள் மட்டும்.

கேள்விகள் மட்டுமே கேட்பதாயின் சிறப்பு விருந்தினர் எதற்கு Mr. Pandey?

திரு சுப.வீ அவர்களுடனான கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளை பற்றியோ அல்லது சுபவீ ஐயா அவர்களின் பதில்களைப்பற்றியோ அல்ல எமது பதிவு.
நீண்ட காலத்திட்டத்தின் நிகழ்காலக்  கறை 

ஆனால், ???? பதிலே சொல்ல விடாமல் கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததின் காரணமும் அதிலும் குறிப்பாக எச்ச.ராஜா பேசியதை பற்றி பேசவே கூடாதென்ற அயோக்கியத்தனமான வாதமும் கீழே உள்ள வாட்ஸப் தகவல்களும் ஒன்றோடொன்று மிகச்சரியாய் பொருந்துகிறதே பாண்டே? பீகாரிலிருந்து வந்த உனக்கு வாழ இடம் கொடுத்த தமிழகம் வாழ மட்டுமே வைக்கும்..ஏமாளியாய் இராது. 


பாண்டே..உங்கள் முயற்சி பலிப்பதற்கு இது உ.பி அல்ல. உலகை ஆண்ட தமிழ்நாடு!! தமிழ் படித்த நீர் எங்கள் வரலாற்றைப் படிக்க மறந்து விட்டீர். பாரும் கண்முன்னே..காதில் புகையோடு. நேரத்துடன் கிளம்பும்..பீகார் செல்லும்   ரயில் பிளாட்பாரத்தில் அதிக  நேரம் நிற்காது. 



குருமூர்த்தி காமெடி

ரஜினியும் பாஜகவும் இணைந்தால்...?

சீரியஸ் காமெடியன் சொறிமூர்த்தி

"தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்" என்று எத்தனை முறை அவர்கள் வாயினாலேயே நிரூபணமாகிறது என்று பாருங்கள். 
நேற்றைய துக்ளக் ஆண்டுவிழாவில் போது வழக்கமான தன்னுடைய காமெடிப்பேச்சால் அரங்கத்தை கிளுகிளுப்பூட்டிய திருவாளர் குருமூர்த்தி,  அப்படியே ரஜினியும் பாஜகவும் இணைவதுதான் வெற்றியையைத் தேடித் தருமாம். அதன் மூலம் தேசியம் வளருவதுதான் தன்னுடைய குறிக்கோள் எனவும் ஆர்கே நகர் அடியில் வெளியே தள்ளிய நாக்கில் எச்சில் ஊற பேசிய போது அரங்கத்தில் இருந்த அம்பிகள் அப்படியே "மேளாவில் ஆர்ப்பரிக்கும் அகோரிகளைப்" போல குதித்து விட்டார்கள். 

ஆனால்,   போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த பணத்தை திருப்பிக் கேட்டு நடுரோட்டில் குடும்பத்தோடு போராடியபோது முதல்வர் நாற்காலியில் எந்த ஆசனத்தில் உட்காருவது என்ற மௌன தியானத்தில் இருந்த இவர்களின் நம்பிக்கை உச்ச (உச்சா) நட்சத்திரம் முழித்துப் பார்த்தபோது போராட்டம் வாபஸ் பெற்று இயல்பு நிலை திரும்பிவிட்டபடியால் "பொங்கல் பண்டிகை" முன்னிட்டு, டமிலர்கள் நல்லா வா'ல'ணும்னு   பிரார்த்திக்க  திரும்பவும் போயிட்டார்.

தேசியம், திராவிடம், தமிழ்த்தேசியம், பெரியாரிடம், அம்பேத்காரிசம், பெண்ணியம், காவிரி, ஈழம் என்று எதைக் கேட்டாலும் கிலோ என்ன விலைன்னு கேக்குற ஈர மண்ணு இவரை நம்பி நோட்டா வோடு  கடும் போட்டியில் இருக்குற பாஜக கூட்டணி வைத்து அந்த நோட்டாவை தோற்கடிக்க வியூகம் அமைத்து விட்டது தெரிகிறது. 

ஆனால் தமிழ் ஆர்வலர்கள் எப்படியும் நோட்டாவை இவர்களிடம் தோற்க விடமாட்டாங்க. விடக்கூடாது.

இதை படித்துப் பார்த்துவிட்டு பொங்குகிற அம்பிகள் அல்லது அவர்களின் கூட்டாளிகளுக்கு என்னுடைய கேள்வி இதுதான்.

"தேசபக்தி நிறைந்த பாஜக பல ஆண்டுகளாக ஆளும் எந்த மாநிலம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குறைந்த பட்சம் அருகிலாவது இருக்கிறது?"














நேற்றைய துக்ளக் ஆண்டு விழாவின் போது பேசிய 

ஆன்மீக அரசியல்..

ஆன்மீக அரசியல்..!! - (ஆடிப்போயிட்டேன்) 

படம் நன்றி: கதிர் (கருஞ்சட்டை தமிழர்) 
நான் எப்போ வருவேன்
எப்புடி வருவேன்
என்ன கொள்கை
கட்சி பெயர்
மக்கள் பிரச்சினை 
மக்களுக்கான போராட்டம் 
எது கேட்டாலும் 
அடிச்சிக் கேட்டாலும்  
இருநூத்தி முப்பத்தி நாலு தொகுதியிலும் 
"ஆயி" மட்டும் போகுறதுக்கு பேர்தான்  
ஆன்மீக அரசியல்.!!


எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வரவேண்டிய தருணமும் நடுநிலையாளர்கள் செல்வாக்கும் வருகிறதோ அப்பொழுதெல்லாம் "மாற்று அரசியல்" பற்றி வாய் கிழிய பேசும் சமூக "அக்கறை"யாளர்களின் பூணூலும் குடுமியும்  ஜெயாவின் "சமூக அக்கறை" பற்றி மவுனமாயிருக்கும் போது  வெளிப்படாமல் இல்லை. 

ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலுவையிலிருக்கும் போது ஊழல் கட்சியென்றும் அதிலிருந்து விடுதலை செய்து நீதியரசர் ஓ பி ஷைனி சாணியில் முக்கி அறிவுஜீவிகளின் முகத்தில் அடிச்ச போது விஞ்ஞான முறையில் ஊழல் என்று சூது கவ்வுவதும் உச்ச நீதி மன்றம் உறுதி செய்த A1 குற்றவாளியை   உயர்த்திப் பிடித்து ...த்த கவ்வுவதும் வருணாசிரம கோட்பாடு உடைந்து நொறுங்கியதின் ஆத்திரமே..

ரஜினியின் வரவைக்கொண்டாடுவது திமுக எதிர்ப்பு மட்டுமல்ல ..தமிழக மக்களின் எதிர்காலத்துக்கான ஆப்பும் கூட..

இல்லையென்றால் வளர்ச்சி பெற்ற மாநிலமாகிய தமிழகத்தில் தன் காவிக்கொள்கையால் வட மாநிலங்களை வளரவே விடாத காவிகள், இந்த காவிக்கிறுக்கனின் உளறலை தத்துவம் என்று ஆர்ப்பரிப்பார்களா?



ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...