மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

வளர்ச்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - த்தூ

பாஜக அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று அவாள் கூட்டம் கொக்கரிக்கும் நாள் விடியாமலேயே போவதாக. 

கர்நாடக மாநில தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. கள்ளத்தனம் செய்யாமல் ஒட்டுமொத்த மாநிலத்தில் எப்படிடா சாத்தியம்?

தேர்தல் ஆணையத்தால் தயாரித்து கொடுக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைகள்  அச்சு அசலாக ஆயிரக்கணக்கில் பாஜக பிரமுகரின் வீட்டில் கைப்பற்றியபோதே தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து தேர்தல் நடத்தும் பொறுப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும். 

ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் புதிய நோட்டுக்கள் மிகச்சாதாரணமாக கட்டுக்கட்டாய் பிடிபட்ட போது அது எந்த வங்கிக்கானது என்று தெரியாது என ரிசர்வ் வங்கி கள்ள மவுனம் சாதித்ததைப்போலவே இன்று கள்ளத்தனமாக தேர்தலையும் நடத்திவிட்டு பதவியேற்புக்காக ஆயத்த வேலைகளில் இருக்கிறார்கள்.

அவாள் தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று எக்சிட் போல் சொன்னபோதே தெரியும் தேர்தலின் முடிவு பாஜகவுக்கு சாதகம் என்று.

முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு "நாசமாப்போக" என்ற வாழ்த்துக்கள் !!


2 கருத்துகள்:

  1. தங்களது வாழ்த்துகளைப் போல அனைத்து மக்களும் வாழ்த்தக் கடவது.

    பதிலளிநீக்கு
  2. ஆம் நண்பரே..கடுப்பேத்துறான் மை லார்ட்..!!

    பதிலளிநீக்கு

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...