மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

ஸ்லீப்பர் செல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்லீப்பர் செல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பூனைக்குட்டி வெளியே வந்ததா? - டிடிவி

பாஜகவின் ஸ்லீப்பர் செல்

அசுர பலத்திலும் அக்கிரம சிந்தையிலும் நிறைந்திருக்கும் மத்திய பாஜக அரசை மிகவும் கூலாக எதிர்கொள்கிறார், இவர்தான் மாவீரன் என்று பாஜக சார்பு ஊடகங்கள் மூலம் கட்டியமைக்கப்பட்ட பிம்பம் தான் இந்த டிடிவி தினகரன் என்று எத்தனை முறை சொன்னாலும் அடங்காத அதிமுகவினர் இன்றைக்கு இலேசாக தலையை சொரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்கள்.

பிரதமரின் தமிழக வருகையை ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல, வடமாநிலத்தவரும் கூட இன்னும் வெளிநாடு வாழ் தமிழர்களும் ஓட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்காத கட்சிகள் ஒன்று பாஜக, மற்றொன்று டிடிவி....!!! (எடப்பாடி குரூப் ஏற்கனவே பாஜகவில் அடக்கம்) 

ஜெயாவின் மர்மமான  மறைவிற்கு பின் ஒட்டுமொத்த அதிமுகவும் கிட்டத்தட்ட சிதைந்தடைந்து மாற்றுக்கட்சி தேடத்தொடங்கியபோது  கட்சியை காப்பாற்றுவதற்காக,  ஒட்டு வங்கிக்காக, அவர்களை வைத்து காரியம் சாதிப்பதற்காக  மத்திய பாஜகவினால் திட்டமிட்டு  அதிமுகவுக்கு ஒரு வலுவான தலைவன் என்ற பிம்பத்தை ஏற்படுத்த நடத்தப்பட்ட நாடகத்தின் கதாநாயகன் தான்  இந்த டிடிவி தினகரன்!! . வில்லனாக வேஷம் போட்டவர்கள் தான் ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் ..!!

கைது டீலிங் பேசவும்,  சிறையில்  ஒத்திகையும், ரெயிடும் ஊடக வெளிச்சமும் ஆரம்பக் காட்சிகள் என்று திட்டமிட்டபடி நடந்தது.

ஆர்கே நகர் தேர்தலில் முதல் தடவை நடந்த போது பணம் கொடுத்ததற்காக தேர்தலையே நிறுத்தி வைத்த ஆணையம் பின்பு நடந்த தேர்தலில் போத்திக் கொண்டு உறங்கியதற்கு காரணம்  பாஜகவின் ஆணைப்படி டிடிவியை மக்கள் செல்வாக்கு உள்ளவராகக் காண்பிப்பதற்கே..

நேர்மையும் மனச்சாட்ச்சியுமுள்ள நபர்கள் அதிமுகவில் உண்டு. 

அறிந்து கொள்ளுங்கள் இந்த பாஜகவின் ஸ்லீப்பர் செல்லை.







யோக்கியன் வர்றான்..

கம்பெடுத்து வெளில வை..



தனது அணியில் இருந்து, இன்னொரு கேஜ்ரிவால் உருவாக விடமாட்டேன் என்று ஊழலுக்கு எதிரான (!!!???) போராட்டக்காரர் அன்னா ஹசாரே இன்று தெரிவித்தார்.

தேர்தல் வரும் பின்னே யோக்கியன் வருவான் முன்னே என்கிற நவீன மொழிக்கேற்ப வந்துட்டார் இந்த மகா யோக்கியர். 

கடந்த நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில் மக்கள் அல்லோகலப்பட்டு கிட்டத்தட்ட இந்தியாவை நாற்பது ஆண்டு காலம் பின்னோக்கி கொண்டு  போய் விட்ட போது, எந்த வலைத்தளங்களில் அண்ணா ஹசாரேவை ஆதரித்து நாடு முழுவதும் இளைஞர் கூட்டம் எழும்பியதோ..அதே தளங்களில் வலை போட்டு தேடியும் கிடைக்காமல் பதுங்கிக்கொண்ட இந்த கிழட்டு ஓநாய் மறுபடியும் ஊளையிட ஆரம்பித்திருக்கிறது..

அன்னா ஹசாரே...நீங்கள் எந்த விதமான போராட்டத்தையும் நாடகத்தையும் நடத்துங்கள். ஆனால் ஊழலுக்கு எதிராக போராடுகிறேன் என்று மட்டும் கொச்சைப்படுத்தாதிருங்கள். 

வேஷம் களைந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது அன்னா ஹசாரே..கிளம்புங்கள்.

பாஜக ஸ்லீப்பர் செல் 


 


ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...