மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை


யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.. 
ஓட்டு மிஷின் மோசடி வரும் பின்னே 
கருத்துக்கணிப்பு வரும் முன்னே.

இதோ வந்து விட்டது..!

இந்தியா முழுவதும் ஒவ்வொரு துறையிலும் நாறிக்கொண்டிருக்கும் பாஜகவின் ஆட்சி அலங்கோலத்தைக் கண்ட பின்னும் கர்நாடக மக்கள் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக ஜெயிக்க வைப்பார்கள் என்றால்  இவர்களால் 'தயாரிக்கப்பட்ட' ஓட்டு மெஷினே கூட நம்பாது.

தொங்கு சட்டசபை அமையும், ஆனாலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கேப்பையில் நெய் வடிக்கும் செயலை தொடங்கி விட்டார்கள்.

இன்னும் இரண்டொரு நாட்களில் வேறொரூ மீடியாவை வைத்து பாஜக குறைந்த  இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியமைக்கும் என்று எருமையை ஏரோப்பிளேன் ஓட்ட வைப்பார்கள்.

கடைசியில் அடிமை  தேர்தல் ஆணையத்தின் முழு ஒத்துழைப்போடும் பாதுகாப்போடும் தங்களுடைய ஓட்டு மெஷினை வைத்து "கேக்குறவன் மட்டுமல்ல .. கேக்காதவனும் கேனையன்" அப்படின்னு வழக்கம் போல வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றின்னு கொக்கரிப்பார்கள்.

கர்நாடக மக்கள் வீறு கொண்டு எழுந்து புரட்சி செய்வார்களா? 

ஓட்டு மெஷினில் ஒரு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகளுக்கு மட்டுமே மோசடி செய்து வைத்திருப்பார்கள்.  பதிவாகும் வாக்குகளில் ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் தாமரைக்கு எதிராக விழுந்தால் காவி பூனைக்கு மணி கட்டுவது மட்டுமல்ல வாயில் பசுவின் கோமியத்தையும் வைக்கலாம்.

செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.


2 கருத்துகள்:

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...