ரவிசங்கர் என்ற சாமியாரின் ஆலோசனைப்படி ராஷ்ட்ரிய ரக்ஷா மகா யாகம் செய்தி இணைப்பு என்ற யாகத்தை கடந்த மாதம் உள்துறை அமைச்சர் கொடியேற்றி தொடங்கி வைத்து, இப்பொழுது (18.03.2018 முதல் 25.03.2018 வரை) டில்லி செங்கோட்டை மைதானத்தில் அரசு செலவில் மகா யாகம் நடந்து கொண்டிருக்கிறது.
108 வேள்வி குண்டங்கள், 2100 புரோகிதர்கள் மற்றும் 51000 மந்திரம் ஓதக்கூடியவர்கள் என்று கிட்டத்தட்ட டில்லி செங்கோட்டை மைதானத்தையே ஒரு பூஜை நகரமாக மாற்றியிருக்கிறார்கள்.
அதானியை எப்படியாவது உலகத்துலேயே பெரிய பணக்காரனாக்கிவிடணும் |
தன்னை எதிப்பவர்களை தன்பக்கம் திருப்பவும் , எதிர் பேசுவோரை ஊமையாக்கவும், தோல்வி முகத்தை வெற்றியாக்கவும் எதிரிகளை அழிக்கவும் அவர்களை தோல்வி பெறச்செய்யவும் உதவி செய்வதாக இந்துக்களால் நம்பப்படக்கூடிய பாகல முகி என்ற தேவதையை பிரியப்படுத்த இவ்வாறு செய்து மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று யாகம் செய்கிறார்.
இப்போ நம்ம சந்தேகம் என்னவெனில், தேவி உதவுவாளென்றால்...
"பலத்த மீடியாக்கள்
அமர்த்தப்பட்ட ஆன்லைன் அடிமைகள் ஆள்பிடிக்கும் கூட்டம்
எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கும் திட்டம்
மின்னணு வாக்கு எந்திரம்
தேர்தல் ஆணையம்
காவி நீதிபதிகள்
கவர்னர்கள்
தமிழ்நாடு போன்ற டயர் சுத்தம் செய்பவர்கள்
கலவரம் தூண்டும் எச்ச கள்
களத்தில் கலவரம் செய்யும் சூத்திர அடிமைகள்"
என்று இத்தனையும் விட வேண்டாம்..மின்னணு வாக்கு எந்திரத்தை மட்டும் வாக்கு சீட்டாக மாற்ற முன்வருவீர்களா..?
தேவியால் முடியாதென்று இத்தனை "கள்" பயன்படுத்துகிறீர்களா..? அல்லது தேவிக்கும் இத்தனை "கள்" உதவிக்கு தேவைப்படுகிறதா..?
அல்லது.. இத்தனை 'கள் ' இருந்தும் அவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் பற்றாக்குறைக்கு தேவியிடம் கோரிக்கையா..?
சரி..ஒருவேளை அப்படியும் அடுத்த தேர்தலில் போனால் கிறிஸ்தவ பாதிரிகளையும் சர்ச்களையும் உடைக்கும் நீங்கள் தேவியை உடைத்து எறிவீர்களா..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக