எடப்பாடி ஓராண்டு நிறைவு செய்திருப்பது சாதனையா?

காட்சி ஊடகங்களும் அதில் பல்வேறு வேஷங்களில் காட்சி கொடுக்கும் அம்பிகளும்  அதிமுக கூன்பாண்டிகளும் கூறிக்கொள்வது "பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி எடப்பாடி அரசு ஓராண்டு நிறைவு செய்திருப்பதே சாதனை தான்" என்பது.

அரசு ஊழியர் போராட்டம், அரச போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம், கதிராமங்கலம், நெடுவாசல், காவிரி, விவசாயிகள் போராட்டம், நீட் பிரச்சினை, தலைமை செயலாளர் அலுவலக ரெயிடு, குட்கா விவகாரம், எம் எல் ஏக்கள் நீக்கம் என்று  எந்தப்  பிரச்சினையானாலும் மத்தியில் ஆளும் பாஜகவின் காலில் மண்டியிட்டு ஆளுநர் உதவியோடு   தமிழகத்தின் உரிமையை அதன் மானத்தோடும் கூட விற்றுப் போட்டது சாதனையென்றால்..

மாட்டிக்கொள்ளாமல் செய்யும் சட்டத்திற்குப் புறம்பான எந்தச் செயலும் சாதனை தானே?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக