உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி
தெளிவாய்க் குழப்பி
வேஷம் பல கொண்டு
உண்மையின் உரைகல்லென்று
ஓயாமல் பொய்யுரைக்கும்
எம்மக்களின் முதல் விரோதி

முட்டாள்களின் சங்கமாம்
மூடர் கூடத்தின்
ஆணிவேரை அகற்ற...

கயவர்களின் கள்ள முகத்தை
கடைந்தெடுத்த காரியவாதிகளின்
கடைசிப்பக்கம் வரைய 
எழு தமிழா விழித்தெழு !

காகிதப்புலிகளின்
கழுத்தறு  நாடகத்தின்
முடிவுரைப்  பக்கத்தை
மாற்றி யமைக்க

எழு தமிழா மறத்தமிழா ....!!

4 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பா...
    எழுச்சிக்கவி அருமை தொடர்ந்து தாருங்கள் வாழ்க வளமுடன்.

    அன்புடன்
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே!! மிக தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.

      நீக்கு