மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

இன்றைய செய்தியும் சில நினைவூட்டலும்...!!

பாஜக வினர், வெட்டவெளிச்சமாக மீடியா முன்பே தான் சொன்னதை சொல்லவே இல்லை என்று மிக எளிமையாக சூடு சொரணை மானம் வெட்கம் (அதெல்லாம் பாஜகவில் எதிர்பார்க்கக்கூடாது) எதுவுமில்லாமல் கடந்து செல்வார்கள்.

இருந்தாலும் சில நினைவூட்டல்கள்..

செய்தி 1: எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் இன்றிரவு  அல்லது நாளை அழைக்கிறார் 

நினைவூட்டல் 1:
அருண் ஜெட்லீ : தொங்கு சட்டசபை அமையுமானால்,  தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்கள் கூட்டணி அமைக்கும்போது, அவர்களை ஆட்சி அமைப்பதற்கும் குறிப்பிட்ட காலத்தில்  பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும்  உத்தரவிடுவதே அரசியலமைப்பு சட்டத்தின் படி சரியாகும். (அப்போ அது மணிப்பூர்லயும் மேகலாயாவிலும் நாகாலாந்திலும் இந்தக் கருத்து தேவையாயிருந்தது)

செய்தி 2: உத்திரப்பிரதேசத்தில் வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்து 15 பேர் மரணம், மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

நினைவூட்டல் 2: மேற்கு வங்காளத்தில் 31, மார்ச் 2016ல் தேர்தல் சமயத்தில் பாலம் இடிந்து விழுந்து 50க்கும் மேற்பட்டோர் மரணித்ததை பிரதமரும் வாரணாசி தொகுதி எம்.பியுமான மோடி சொன்னது:  "இது கடவுளின் செய்தி. இந்த ஆட்சி தொடருமானால் ஒட்டுமொத்த மேற்கு வங்காளமும் அழிந்துவிடும்"

ஏதாவது உரைக்கும்ங்கிறீங்க?

2 கருத்துகள்:

  1. நல்ல எருமைக்கு ஒரு சூடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே..எருமைக்கு கூட உரைத்துவிடும் ஆனால் எதுவும் செய்யத்துணிந்துள்ள இக்கூட்டத்திற்கு இனி இறைவன் தான் ஏதாவது செய்யவேண்டும்..

      நீக்கு

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...