வைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் - பொன்னார்


செய்தி: பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மேலே உள்ள படத்திலுள்ள நபர் வைகோ தன் மீது கல்வீசினவர்களை "பாஜகவின் கைக்கூலிகள்" என்று கூறியதற்கு கண்டனம் (இணைப்பு)

- அதானே, நாலு மாசம் சம்பள பாக்கி (எனக்கும் சேர்த்து தான்) வைத்திருப்பது தெரியாமல் இன்றைக்கும் கைக்கூலிகள் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?..  

உசிலம்பட்டி வட்டாரங்களில் மரத்தடி நாட்டாமை பஞ்சாயத்துகளில் நடந்த ஒரு  நாட்டாமை தீர்ப்பு "அவன் உன்னை அடிச்சிருக்கலாம் ..அதுக்காக அவரை  போடா ன்னு எப்படி மரியாதை இல்லாம நீ சொல்லலாம்? இருநூறு ரூவா அபராதம் கட்டிட்டு அவரு கால்ல விழுந்து மன்னிப்பு கேளு" 

அதே போல, மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தான ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் பேரணி சென்ற வைக்கோ மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது மற்றும் எச் ராஜா, எஸ்.வி சேகர் போன்ற வெறியர்கள் வன்மமாக, ஆபாசமாகப்  பேசுவது தவறில்லை. 

காவிக்கொடியுடன் வந்து கல்வீசிய அவர்களை பாஜகவின் கைக்கூலிகள் என்று கூறியது தான் தவறு. 









1 கருத்து: