மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

அர்ஜுன் சம்பத் என்ற இந்துவும்.....

இந்துக்களாய் ஒன்றுபடுவது எப்படி என்ற முக்கிய ஆலோசனையில் இந்து தலைவர்கள்.

2016 - 2017 ல் பாஜவுக்கு நன்கொடை 89 சதவீதம்..!

நா மை  காவுங்கா.. நா கானே துங்கா..


இன்றைய, அவாளின் ஏடாகிய தினமலர் செய்தி  

-"கடந்த 2016-2017 நிதியாண்டில்  பாஜகவுக்கு நன்கொடையாக 290 கோடி."
(உண்மையில் 589 கோடி என்பது வேறு விஷயம்).


சாப்பிட மாட்டேன்....சாப்பிட விடமாட்டேன் 
- அது போன மாசம் 

நான் மட்டும் சாப்பிடுவேன் ..
யாரையும் சாப்பிட விட மாட்டேன்
 - இது இந்த மாசம்.

அது போன மாசம். நான் சொல்றது இந்த மாசம்.

விஜயேந்திரன் வகையறாவுக்கு நன்றி...!!!!

'அவாள்' அப்படித்தான் ..இன்னா ங்கிறே ?

இந்துக்களாய் ஒன்றுபடுவோம் என்ற அவாள்களின் அன்பான கோரிக்கையை ஏற்று வலைத்தளங்களில் வீரத்தை ஆபாசச் சொற்களால் வசைபாடிய தமிழ் இந்துக்களை ,

தமிழகத்தின் எந்த பொதுப்பிரச்சினைக்கும் வெளியே வராத அவாள்களை நம்பாதீர்கள் என்று சொன்னா யாருமே கேக்காத தமிழ் இந்துக்களை, 

இந்த சங்கரராமன் கொலைக் கும்பல் ஒரே செயலினால் இன்றைக்கு அறியச்செய்து  விட்டனர் "அவாள்கள் யாருக்கானவர்கள்" என்று....

நன்றி விஜயேந்திரா..!!

இன்னொரு கலவரம் உருவாக்கும் முயற்சியில் பரிவாரங்கள் 














குறிப்பு: கலவரம் வரும் என்று மட்டும் கனவிலும் நினையாதே..இது தமிழ்நாடு..!!!

















சி ஏ ஜி வினோத்ராய் - 2 ஜி தீர்ப்பு பற்றி கருத்துக் கூற மறுப்பு

முன்னாள் சிஏஜி தலைமைக்கணக்காயர் வினோத்ராய் 2 ஜி தீர்ப்பு பற்றியும் ஆ.ராசா வின் சரமாரிக் குற்றச்சாட்டு பற்றியும் கருத்துக் கூற மறுப்பு - செய்தி 
ராஜ்நாத்து பாய்..உன் குத்தமா..என் குத்தமா ..யாரை நான் குத்தம் சொல்ல..






















சிவசேனா-பாஜக முறிவல்ல..தற்காலிகப் பிரிவு !

சில மாதங்களாக வெளிப்படையாகவே இருந்த கிச்சு கிச்சு ஊடல் தற்போது எதிர்பார்த்தபடி வெளிப்படையாக கூட்டணி முறிவு என்று அறிவித்திருக்கிறார்கள். 
பீகாரைப்போல...இங்கேயும் 
ஆனால் பீகாரின் நித்திஷ் குமார் - பாஜக கூட்டணி செய்த மக்கள் துரோகத்தைப் போல இங்கேயும் நடக்காது என்று மராட்டியர்கள் நம்புவார்களா என்ன?

ஆளும் கட்சி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு மற்றும் பாஜகவின் மிகப்பெரிய தோல்வி திட்டங்களான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றிற்கெதிரான ஓட்டுக்களை பிரித்து எப்படியாவது சில சீட்டுக்களை பெற்ற பின் மீண்டும் ஊடல்..கூடல்..தேனிலவு..உறவு..என்று ஒரே அமர்க்களம் பண்ண எண்ணம் தான்.

ஆனால் மராட்டியர்கள் பீகாரிகளல்ல. சேர்ந்து வந்தாலும் தனித்தனியா வந்தாலும் இந்த முறை கூர் சீவப்பட்டு ரெடியாக உள்ளது என்றே மகாராஷ்டிரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

-நமது சிறப்பு நிருபர். (தினமலர்க்கு மட்டும் தான் இருக்கணுமா என்ன?)













இந்துக்களே ஒன்றுபடுங்கள்..!

எழுச்சி தொடரட்டும்..!!! சிலைகளை கடத்தும் கும்பல்களுக்கு உடந்தையாக இருக்கும் குடுமிகளுக்கு எதிராக இந்துக்களாய் ஒன்றுபடுவோம்..!!
















தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலிருந்து 1262 சாமி சிலைகள் மாயமாகி (திருடப்பட்டு) இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 

வைரமுத்துக்கு எதிராக எழும்(ப்)பிய எழுச்சி தொடரட்டும். ஜீயர்களே, எச்சகளே, நித்தியின் ஆன்மீக சிஷ்யைகளே, இந்துக்களே..பொங்குவோம் வாருங்கள். பொங்கச்சோறு தின்றது போதும்.

இந்த பழங்கால சிலைகளுக்கு வெளிநாட்டில் அதிக விலை கிடைக்கும் என்பதால் சமூக விரோதிகள், உள்ளே இருக்கும் குடுமிகளின் துணையோடு அவற்றை கடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

எனவே தொடரட்டும் நம் போராட்டம்.

















பக்தர்கள் இதுகுறித்து வருத்தத்தோடு ஆன்மீகப் பெரியவர்கள் எது  எதற்கோ தேவையில்லாமல் போராடுகிறார்கள். உண்மையில் அவர்கள் போராடவேண்டிய விஷயம் இதுதான். மீதமுள்ள சிலைகளையாவது பாதுகாக்கலாம் என்றனர். 
செய்வேளா...???? 

ரெங்கராஜ் பாண்டே - கேள்விகள் மட்டும்.

கேள்விகள் மட்டுமே கேட்பதாயின் சிறப்பு விருந்தினர் எதற்கு Mr. Pandey?

திரு சுப.வீ அவர்களுடனான கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளை பற்றியோ அல்லது சுபவீ ஐயா அவர்களின் பதில்களைப்பற்றியோ அல்ல எமது பதிவு.
நீண்ட காலத்திட்டத்தின் நிகழ்காலக்  கறை 

ஆனால், ???? பதிலே சொல்ல விடாமல் கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததின் காரணமும் அதிலும் குறிப்பாக எச்ச.ராஜா பேசியதை பற்றி பேசவே கூடாதென்ற அயோக்கியத்தனமான வாதமும் கீழே உள்ள வாட்ஸப் தகவல்களும் ஒன்றோடொன்று மிகச்சரியாய் பொருந்துகிறதே பாண்டே? பீகாரிலிருந்து வந்த உனக்கு வாழ இடம் கொடுத்த தமிழகம் வாழ மட்டுமே வைக்கும்..ஏமாளியாய் இராது. 


பாண்டே..உங்கள் முயற்சி பலிப்பதற்கு இது உ.பி அல்ல. உலகை ஆண்ட தமிழ்நாடு!! தமிழ் படித்த நீர் எங்கள் வரலாற்றைப் படிக்க மறந்து விட்டீர். பாரும் கண்முன்னே..காதில் புகையோடு. நேரத்துடன் கிளம்பும்..பீகார் செல்லும்   ரயில் பிளாட்பாரத்தில் அதிக  நேரம் நிற்காது. 



இந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்குதல்..!

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்குதல்..!



"பொய்யை நம்பும்படியாக சொல்லு. மக்கள் நம்பாவிட்டாலும் திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டே இரு. காலப்போக்கில் மக்கள் அதை நம்புவார்கள்" என்றான் அடால்ப் ஹிட்லர்.  அவனின் வாரிசுகள் அல்லது அவன் தத்துவத்தை அப்படியே பின்பற்றுபவர்கள் இன்று வரை இந்தியாவில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

கருத்து திணிப்புகளை மக்கள் சமீப காலமாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டாலும் தங்களுடைய தொடர்ச்சியான பொய்களினால் மக்களை உளவியல் ரீதியாக தயார் செய்கிறார்கள் என்பதை மறுக்கவியலாது. 

கீழே உள்ள நேற்றைய மோசடி திணிப்பு ஒரு எடுத்துக்காட்டு.


ரஜினி கட்சி ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் மொத்தமுள்ள அவருடைய சில ஆயிர ரசிகர்களைத் தவிர மிக சாதாரணமான சாமானியனிலிருந்து படித்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமூக அக்கறையாளர்கள் மற்றும் அரசியல் ரீதியாக பாஜகவைத்தவிர கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே மிக்க கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் இருப்பதை கண்கூடாகவே காணமுடிந்தது.

ஆனால் இந்த மோசடித்திணிப்பு 16 சதவீதம் (தினமலரில் 17 சதவீதம்) ஓட்டும் 30 தொகுதிகளையும் பிடிப்பார் என்று முதலில் ஒரு சிறிய சதவீதத்தை சொல்வது போல சொல்லி பொய்யாக ரஜினியின் இருப்பை மக்கள் மனதில் நிறுத்தவே இந்த முயற்சி. உண்மையில் 2 சதவீதம் கூட பிடிப்பாரா என்றால் நிச்சயம் முடியாது. அவருடைய ரஜினிமன்றம் ஆள்பிடிப்பு தளத்தில் இன்னும் 50 ஆயிரம் தாண்டவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு தெளிவில்லாத, முடிவெடுப்பதில் குழப்பவாதியான அதுவும் பாஜக சார்புள்ள ஒரு நடிகரை நம்பி 30 தொகுதிகளை தமிழக மக்கள் தருவார்கள் என்று சொல்லுவது எப்படியென்றால், ஜெயிக்கமாட்டார் ஆனால் 30 இடங்களை பெறுவார் என்று உளவியல் ரீதியாக மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் தந்திரமே.

பின்னால், கட்சி பெயர் கொள்கை கூட்டணி என்று வரும்போது 30 இடங்களை 60...90...என்று படிப்படியாக திணிப்புகளை வெளியிட்டு கடைசியில் திமுகவிற்கும் ரஜினிக்கும் சமமான வாய்ப்பு என்று தேர்தல் நேரத்தில் பினாத்துவதற்கான அடித்தளமே இந்த மோசடி கருத்துக்கணிப்பு.

உண்மையில், ஆளும் அதிமுக மீதும் மத்தியில் ஆளும் பாஜக மீதும் அதீத வெறுப்பில் உள்ள தமிழக மக்கள் தூக்கி எறியவே தயாராக காத்துக்கொண்டிருக்கிறார்கள் ..ரஜினியையும் சேர்த்து. 


வட போச்சே..!

பிரவீன் தொகாடியா போன்ற பிரபலமானவரை 'இந்துத்துவா தலைவர் மாயம்' என்று பொத்தாம் பொதுவாக தினமலர் செய்தி வெளியிட்ட போதே சந்தேகம் இருந்தது. 


இன்றைய தொகாடியாவின் பேட்டியில் அவர் கூறும்போது  "இந்துக்களுக்கான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும். ராமர் கோவில் விவகாரம், பசுவதை தடுப்பு சட்டம், காஷ்மீர் பண்டிட்டுகளை மீளக் குடியமர்த்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் நான் குரல் கொடுத்து வருகிறேன். எனது இந்த குரலை ஒடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. என் மீதான பழைய வழக்குகள் தூசு தட்டப்படுகின்றன. எனது குரலை ஒடுக்குவதற்காக என்னை கைது செய்ய பல மாநிலங்களில் முயற்சிகளில் மேற்கொள்ளப்படுகின்றன." என்ற வார்த்தைகளில் விஷமத்தனம் இல்லாமல் இல்லை.


 நான்கு நீதிபதிகளும் வெளியே வந்து தோலுரித்த பின்,  தமிழக ஊடகங்கள் மற்றும் மணிக்கொரு தடவை விவாதம் நடத்தும் காட்சி ஊடகங்கள்   தங்களுடைய எஜமான் விசுவாசத்தினால் 'அனைத்தையும்' மூடிக்கொண்டாலும் வடநாட்டு ஊடகங்களில்  மிக வலுவாகவே பேசப்பட்டதினால் அதுவும் அடிவருடி ரிபப்ளிக் டிவி  எத்தனை தான் புலனாய்வுத்திறமையை காண்பித்து முட்டுக்கொடுத்தும்  கூட ஆளும் தரப்பு ஆடிப் போயி இருந்ததை டெல்லி வட்டாரங்கள் இரண்டு நாளைக்கு முன்பே தெரிவித்தன.

ஏதோ  அசம்பாவிதம் அல்லது திசைதிருப்பல் நாடகம் அரங்கேற்ற இருந்ததை எம்மால் யூகிக்க முடிந்தது. அது தோல்வியடைந்ததா அல்லது இனிமேல் தான் நாடகத்தின் முக்கியப்பகுதி இருக்கிறதா என்பதை இரண்டொரு நாட்களில் காவிச்சார்பு ஊடகத் திரையில் காணலாம். 

இப்போதும் தொகாடியாவின் கருத்தைக் கவனியுங்கள் "இந்துக்களுக்கான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும். ராமர் கோவில் விவகாரம், பசுவதை தடுப்பு சட்டம், காஷ்மீர் பண்டிட்டுகளை மீளக் குடியமர்த்துதல்" போன்றவை ஏதோ மிக சமீபமான எதிர்காலத் திட்டத்தை உணர்த்துவதாக இல்லை?



தமிழன்..டா..!

எத்தனை முறை சாணியில் முக்கி அடிச்சாலும், தெளிய வச்சி திரும்பவும் அடிச்சாலும், ஆர்கே நகர் போன்று ஓட ஓட விரட்டியடிச்சாலும், இந்த அரை ட்ரவுசர்களுக்கு அட்ராஸிட்டி எண்ணம் குறையவே குறையாது.

அவர்களாகவே வாலன்டியராக வந்து வண்டியில ஏறிக்குவாங்க. 

கீழே கொடுத்துள்ள மானத்தமிழனின் பொங்கல் வாழ்த்தும் அதற்கு கீழே ஒரு ஆர் எஸ் எஸ் காரர்  ஒருவரின் பதிலும் பாருங்கள்.


மானத்தமிழன் 






(ஹே ..நானும் ரவுடி தான்) 

விஜய் சேதுபதி "தை புத்தாண்டு" என்று குறிப்பிட்டதால் காண்டாகி  ஆத்திரத்தில் நாங்க தான் அந்த தீய சக்தி என்று (ஒரு அடி  கூட வாங்காம உண்மையா..) ஒத்துக்கிட்டார்  சேகர். 









அரசியல்வாதி ரஜினியின் அப்டேட்

பொங்கல் வாழ்த்து சொல்ல வந்த இடத்தில் ரஜினியின் வீட்டிற்கு வெளியே இரண்டு நாளாய் காத்துக் கிடந்து மயங்கி கிடந்த ரசிகக்குஞ்சு ஒருவரை "தெளிய வைத்து" விட்டு  அவரிடம்,  தலைவர் எப்போ வருவார் என்று கேட்கவும், தலைவர் ஏற்கனவே இருநூத்தி முப்பத்து நாலு தொகுதியிலும்....என்றவரை இடைமறித்து அட..ச்ச் சீ..எப்பய்யா வீட்டை விட்டு வெளிய வருவார் என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே நீண்ட உறக்கத்துக்குப் பின் (தியானம் என்றும் அரை ட்ரவுசர்கள் சொல்வார்கள்) ஆன்மீக அரசியல்வாதி வந்தார்.

அவரிடம் நாம் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் "நான் ஒரு தடவ சொன்னா எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்ன மாதிரி" என்று கேட்க சொல்லி கையை ஸ்டைலாக அசைக்க..நாம் தொடர்ந்தோம்.

"ஐயா, இந்த ஆண்டாள் பற்றி உங்க திரைத்துறையை சேர்ந்த வைரமுத்து சொன்னது  குறித்து  உங்கள் கருத்து?"

"நெக்ஸ்ட்"

 "இந்த எச்.ராஜா அவர்களின் ஆன்மீகத் தனமான  அமைதியான  பதிலடி மேடைப்பேச்சு பற்றி உங்கள் கருத்து?"

"நெக்ஸ்ட்"

"தேசபக்தர்களின் சமீபத்திய அட்ராஸிட்டி  பற்றி?"

"நெக்ஸ்ட்"

"ஆண்டாள் பற்றி உங்கள் கருத்து?"

"நெக்ஸ்ட்"

"ஐயா ..இந்த தேவதாசி...அப்படீன்னு ..?"

(ஒருவித புன்முறுவலுடன்) "நெக்ஸ்ட்"

"ஆன்மீக அரசியல்வாதியான உங்களின் கருத்து ரொம்ப முக்கியம் ஐயா"

"வேற எதுவும் கேள்வி இருக்கா?"

"இல்ல.." (நீங்க வாய தொறந்தாதானே?)

"கண்ணா...கீழே பாரு..ஹா..ஹா..ஹா.."




குருமூர்த்தி காமெடி

ரஜினியும் பாஜகவும் இணைந்தால்...?

சீரியஸ் காமெடியன் சொறிமூர்த்தி

"தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்" என்று எத்தனை முறை அவர்கள் வாயினாலேயே நிரூபணமாகிறது என்று பாருங்கள். 
நேற்றைய துக்ளக் ஆண்டுவிழாவில் போது வழக்கமான தன்னுடைய காமெடிப்பேச்சால் அரங்கத்தை கிளுகிளுப்பூட்டிய திருவாளர் குருமூர்த்தி,  அப்படியே ரஜினியும் பாஜகவும் இணைவதுதான் வெற்றியையைத் தேடித் தருமாம். அதன் மூலம் தேசியம் வளருவதுதான் தன்னுடைய குறிக்கோள் எனவும் ஆர்கே நகர் அடியில் வெளியே தள்ளிய நாக்கில் எச்சில் ஊற பேசிய போது அரங்கத்தில் இருந்த அம்பிகள் அப்படியே "மேளாவில் ஆர்ப்பரிக்கும் அகோரிகளைப்" போல குதித்து விட்டார்கள். 

ஆனால்,   போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த பணத்தை திருப்பிக் கேட்டு நடுரோட்டில் குடும்பத்தோடு போராடியபோது முதல்வர் நாற்காலியில் எந்த ஆசனத்தில் உட்காருவது என்ற மௌன தியானத்தில் இருந்த இவர்களின் நம்பிக்கை உச்ச (உச்சா) நட்சத்திரம் முழித்துப் பார்த்தபோது போராட்டம் வாபஸ் பெற்று இயல்பு நிலை திரும்பிவிட்டபடியால் "பொங்கல் பண்டிகை" முன்னிட்டு, டமிலர்கள் நல்லா வா'ல'ணும்னு   பிரார்த்திக்க  திரும்பவும் போயிட்டார்.

தேசியம், திராவிடம், தமிழ்த்தேசியம், பெரியாரிடம், அம்பேத்காரிசம், பெண்ணியம், காவிரி, ஈழம் என்று எதைக் கேட்டாலும் கிலோ என்ன விலைன்னு கேக்குற ஈர மண்ணு இவரை நம்பி நோட்டா வோடு  கடும் போட்டியில் இருக்குற பாஜக கூட்டணி வைத்து அந்த நோட்டாவை தோற்கடிக்க வியூகம் அமைத்து விட்டது தெரிகிறது. 

ஆனால் தமிழ் ஆர்வலர்கள் எப்படியும் நோட்டாவை இவர்களிடம் தோற்க விடமாட்டாங்க. விடக்கூடாது.

இதை படித்துப் பார்த்துவிட்டு பொங்குகிற அம்பிகள் அல்லது அவர்களின் கூட்டாளிகளுக்கு என்னுடைய கேள்வி இதுதான்.

"தேசபக்தி நிறைந்த பாஜக பல ஆண்டுகளாக ஆளும் எந்த மாநிலம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குறைந்த பட்சம் அருகிலாவது இருக்கிறது?"














நேற்றைய துக்ளக் ஆண்டு விழாவின் போது பேசிய 

கல்லுளி மங்கன்

தலைவர் ஒருதடவ கூட..

'டமிலர்'களை நல்லா வாழ வைக்க லேட்டஸ்டா வந்த வர்ணாசிரமப் புலி 

அரசியலுக்கு, பொது வாழ்க்கைக்கு வராமலே அவரு காவிரில என்ன சொன்னாரு ஈழத்தமிழர் களுக்கு என்ன கதைச்சாருன்னு எப்புடி கேட்க முடியும்னு முட்டுக் கொடுத்த குடுமி கூட்டத்தை சேர்ந்த அறிவாளிகள்  பாண்டேக்கள்  மணியன்கள் போன்றோரின் முகத்துல சாணியடிச்ச மாதிரி நம்ம தலைவர்..அதாங்க கண்டக்டரா இருந்த எனக்கு  ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கம் கொடுத்த 'டமிலர்'களை  வாழ வைக்கணும்னு மலேசியா தமிழர்ட்ட பிச்சை எடுத்தப்ப சொன்னாருல்ல அவரு தான்...

கடந்த எட்டு நாளா தங்களோட எதிர்காலத்துக்காக தங்களோட சம்பளத்துல இருந்து பிடித்தம் செய்த பணத்தை கொடுங்கன்னு குடும்பத்தோட நடு ரோட்டுல நின்னப்ப, அவரு ஏற்கனவே சொன்ன "சிஸ்டம் சரியில்ல"ங்கிற வார்த்தையைக் கூட சொல்லாம தலைமறைவாயிட்டாரு நாளைய முதல்வர். (எதுக்கு முதல்வர்னு கேட்கக்கூடாது..அப்படியே ஒரு நிமிஷம் ஆடிப் போயிடுவேன்)

வெறும் "வாயை "மட்டுமே வச்சி பொழப்பு நடத்துறவங்கள பார்த்திருக்கோம். இவரு வாயைக்கூட திறக்காம ஸ்ட்ரெயிட்டா முதலமைச்சரா கனவு கண்டுட்டு சிஸ்டம் வாங்க சாமியார்களை தேடி போயிட்டாரு அரசியல் வாதி ரஜினி.




ஆன்மீக அரசியல்..

ஆன்மீக அரசியல்..!! - (ஆடிப்போயிட்டேன்) 

படம் நன்றி: கதிர் (கருஞ்சட்டை தமிழர்) 
நான் எப்போ வருவேன்
எப்புடி வருவேன்
என்ன கொள்கை
கட்சி பெயர்
மக்கள் பிரச்சினை 
மக்களுக்கான போராட்டம் 
எது கேட்டாலும் 
அடிச்சிக் கேட்டாலும்  
இருநூத்தி முப்பத்தி நாலு தொகுதியிலும் 
"ஆயி" மட்டும் போகுறதுக்கு பேர்தான்  
ஆன்மீக அரசியல்.!!


எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வரவேண்டிய தருணமும் நடுநிலையாளர்கள் செல்வாக்கும் வருகிறதோ அப்பொழுதெல்லாம் "மாற்று அரசியல்" பற்றி வாய் கிழிய பேசும் சமூக "அக்கறை"யாளர்களின் பூணூலும் குடுமியும்  ஜெயாவின் "சமூக அக்கறை" பற்றி மவுனமாயிருக்கும் போது  வெளிப்படாமல் இல்லை. 

ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலுவையிலிருக்கும் போது ஊழல் கட்சியென்றும் அதிலிருந்து விடுதலை செய்து நீதியரசர் ஓ பி ஷைனி சாணியில் முக்கி அறிவுஜீவிகளின் முகத்தில் அடிச்ச போது விஞ்ஞான முறையில் ஊழல் என்று சூது கவ்வுவதும் உச்ச நீதி மன்றம் உறுதி செய்த A1 குற்றவாளியை   உயர்த்திப் பிடித்து ...த்த கவ்வுவதும் வருணாசிரம கோட்பாடு உடைந்து நொறுங்கியதின் ஆத்திரமே..

ரஜினியின் வரவைக்கொண்டாடுவது திமுக எதிர்ப்பு மட்டுமல்ல ..தமிழக மக்களின் எதிர்காலத்துக்கான ஆப்பும் கூட..

இல்லையென்றால் வளர்ச்சி பெற்ற மாநிலமாகிய தமிழகத்தில் தன் காவிக்கொள்கையால் வட மாநிலங்களை வளரவே விடாத காவிகள், இந்த காவிக்கிறுக்கனின் உளறலை தத்துவம் என்று ஆர்ப்பரிப்பார்களா?



ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...